தங்கம் விலை ரூ.56 குறைந்ததுதங்கம் விலை ரூ.56 குறைந்தது ... வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ...
80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2013
14:50

நோக்கியா நிறுவனம், சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 80 லட்சம் லூமியா மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, இதே காலாண்டில் விற்பனை செய்த லூமியா போன்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமானது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனையான லூமியா போன்களின் எண்ணிக்கை 74 லட்சமாக இருந்தது. குறைந்த விலையிட்ட லூமியா 520 இந்த விற்பனையில் முக்கிய பங்கு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் இந்த போன் அதிக எண்ணிக்கையில் மக்களால் விரும்பி வாங்கப்பட்டது. விரைவில் பெரிய அளவில் அகலத் திரை கொண்ட விண்டோஸ் போனை அறிமுகப்படுத்த நோக்கியா முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தன் ஆஷா 501 போன்களை வாங்குவோருக்கு இலவசமாக இன்ஸூரன்ஸ் வசதியினை நோக்கியா அளிக்கிறது. இதற்கென நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. திருட்டு, கொள்ளை, வன்முறையில் தொலைதல், நீரால் கெட்டுப் போதல், உடைந்து போவதனால் இயக்கம் நின்று போதல் போன்றவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பாக இது இருக்கும். வரும் நவம்பர் 15 வரை இந்த இலவச இன்ஸூரன்ஸ் திட்டம் அமலில் இருக்கும். சென்ற ஜூலை மாதம் நோக்கியா ஆஷா 501 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதன் விலை ரூ.5,199. இதில் 3 அங்குல அகலத் திரை, கனத்த கிளாஸ் அமைப்பு, 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, டூயல் சிம், 2ஜி இணைப்பு, வை-பி, புளுடூத், எப்.எம். ரேடியோ, 17 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் தரும் 1,200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)