இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரிப்பு: இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளால்இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரிப்பு: இறக்குமதிக்கான ... ... டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு ...
சொத்து பத்திரங்களை ஒப்படைக்க சகாராவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2013
04:23

புதுடில்லி: முறைகேடாக டெபாசிட் திரட்டிய வழக்கில், சகாரா குழுமம், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துரிமைப் பத்திரங்களை, மூன்று வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.விதிமுறைகள்சகாரா குழுமத்தை சேர்ந்த இரு நிறுவனங்கள், 'செபி'யின் விதிமுறைகளை மீறி, டெபாசிட் திரட்டிய வழக்கில், 3 கோடி முதலீட்டாளர்களுக்கு, 23 ஆயிரம் கோடி ரூபாயை, வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆனால், சகாரா குழுமம், அத்தொகையை திரும்பத் தராமல், பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், மூன்று வாரங்களுக்குள், சகாரா குழுமம், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துரிமைப் பத்திரங்களை, தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.குறித்த காலத்திற்குள், சொத்துரிமை பத்திரங்களை, சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இயக்குனர்கள் ஒப்படைக்க தவறினால், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியே செல்ல முடியாது என்றும், சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.இவ்விவகாரத்தில், சகாரா குழுமம், பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு கண்ணாமூச்சி விளையாடுவதால், இனிமேலும், அதனை நம்ப முடியாது என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அதன் சொத்து விவரங்களை, கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.முதலீட்டாளர்கள்சகாரா குழுமம், பணம் கொடுக்காமல் தப்பிக்க முடியாது என்றும், கண்டிப்பாக முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுத்தே தீர வேண்டும் எனவும், சுப்ரீம் கோர்ட் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)