பதிவு செய்த நாள்
29 அக்2013
04:28
புதுடில்லி: மத்திய அரசு, 1,258 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, ஒப்புதல் வழங்கியுள்ளது.இதுகுறித்து, நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்,13 அன்னிய நேரடி முதலீட்டுதிட்டங்களுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஆக்சிஸ் பேங்க், 1,200 கோடி ரூபாய் திரட்டி, அதன் அன்னிய பங்கு மூலதனத்தை, 49ல் இருந்து 62 சதவீதமாக ( 6,266 கோடி ரூபாய்) உயர்த்திக் கொள்ள அனுமதி கோரியுள்ளது.இந்த விண்ணப்பம், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சாந்தா பயோடெக்னிக்ஸ், ஈக்யுடாஸ் ஹோல்டிங்ஸ், ஸ்டார்க் டைட்டானியம் ஆகிய நிறுவனங்கள், முறையே, 755 கோடி ரூபாய், 223 கோடி ரூபாய் மற்றும், 156 கோடி ரூபாய் என்ற அளவில், அன்னிய நேரடி முதலீட்டை திரட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஜூபிலன்ட் ஏரோநாட்டிக்ஸ், சோமா டோல்வேஸ், வங்க தேசத்தின், எம்.டீ.ஷாஜகான் பப்லு, மொரீஷியஸின் கிரீன் டெஸ்டினேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின், அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்கள் குறித்த பரிசீலனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஐந்து நிறுவனங்களின் திட்டங்களுக்கான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 4 சதவீதம் அதிகரித்து, 846 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 816 கோடி டாலராக இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|