பதிவு செய்த நாள்
29 அக்2013
04:34
புதுடில்லி: நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவாக, 38 சதவீதம் குறைந்து, 140 கோடி டாலராக (8,400 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 226 கோடி டாலராக இருந்தது.இதற்கு முன், சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான், மிகவும் குறைந்தபட்சமாக, 110 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு 2013–14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 846 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 816 கோடி டாலராக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்ததில், சேவைகள் துறை முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, மருந்து, மோட்டார் வாகனம், கட்டுமானம் ஆகிய துறைகள் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|