பதிவு செய்த நாள்
30 அக்2013
23:44
புதுடில்லி: மத்திய அரசு, இறக்குமதி செய்யப்படும், 10 கிராம் தங்கத்தின் மதிப்பை, 442 டாலராக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முன், 418 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.பண்டிகை காலத்தையொட்டி, உள்நாட்டு சந்தை களில், தங்கத்திற்கான தேவை அதிகரித்து, அளிப்பு குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு, இதன் மதிப்பை, உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இறக்குமதி செய்யப்படும், 1 கிலோ வெள்ளியின் மதிப்பில் மாற்றம் எதுவும் செய்யாமல், 699 டாலர் என்ற அளவிலேயே தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று, பித்தளை கழிவு, கசகசா விதைகள், பாக்கு மற்றும் சில சமையல் எண்ணெய் வகைகள் மீதான இறக்குமதி மதிப்பில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.சுங்க வரி துறை, மாற்றி அமைக்கும் மதிப்பின் அடிப்படையில்தான், மேற்கண்டவற்றின் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|