‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’ ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.50 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.50 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பு கணக்கிற்கு மாத வட்டி வழங்க வங்கிகள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2013
23:56

மும்பை: சேமிப்பு கணக்கிற்கு, மாதந்தோறும் அல்லது காலாண்டிற்கும் குறைவான இடைவெளியில் வட்டியை கணக்கிட்டு வழங்கலாம் என்ற, ரிசர்வ் வங்கியின் யோசனைக்கு, வங்கிகள் வட்டாரத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கிநேற்று முன்தினம், ரிசர்வ் வங்கி, காலாண்டு நிதி ஆய்வு கொள்கையை வெளியிட்டது.
அதில், அனைத்து வணிக வங்கிகளும், கணினி சார்ந்த ஒருங்கிணைப்பு வசதிகளை கொண்டிருப்பதால், அவை விரும்பினால், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, மாதந்தோறும் கணக்கிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். அல்லது, தற்போது, காலாண்டிற்கு ஒரு முறை வட்டியை கணக்கிடுவதை விட, குறைந்த கால இடைவெளியில் வட்டியை கணக்கிட்டு வாடிக்கையாளர் களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என, தெரிவித்தது.
குறுந்தகவல்:மேலும்,வங்கிகள் வாடிக்கையாளருக்கு அனுப்பும் குறுந்தகவலுக்கு, குறிப்பிட்ட தொகை என்றில்லாமல், பயன்பாட்டிற்கேற்ப கட்டணம் வசூலிக்கலாம் எனவும், ரிசர்வ்வங்கி யோசனை கூறியது.இது குறித்து, பெயர்குறிப்பிட விரும்பாத, ஒரு முன்னணி வங்கியின் தலைவர் கூறியதாவது:சேமிப்பு கணக்கிற்கு, மாதாந்திர அடிப்படையில் வட்டி வழங்கினால், வங்கியின் வட்டிசெலவினம் உயர்ந்துவிடும். அதுமட்டுமின்றி, டெபாசிட் செலவு உயரும் போது, கடன் செலவினமும் அதிகரிக்கும்.
கட்டணம்:அதனால், மாதாந்திர வட்டி கணக்கீடு சாத்தியம் இல்லாதது. குறுந் தகவலை பொறுத்தவரை, அவற்றுக்கான கட்டணத்தை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உயர்த்துகின்றன. அதை வங்கிகள், வாடிக்கையாளர் தலையில் சுமத்துகின்றன.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர்,அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் யோசனையை செயல்படுத்துவதில் பிரச்னை ஏதும்இல்லை. அதை, கம்ப்யூட்டர் கணக்கிட்டுவிடும். ஆனால், உள் கட்டமைப்பில்என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும்.
குறுந்தகவல்களுக்கான கட்டணம் மிகக் குறைவானது. வாடிக்கையாளர்களிடம் இருந்தும் பெரியஅளவில் புகார்கள் வருவதில்லை. அதனால், வாடிக்கையாளர் களின் பாதுகாப்பு கருதி, வங்கியின் குறுந்தகவல் சேவை தொடரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் பேங்கின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கே.ஆர்.காமத் தெரிவித்ததாவது:குறுந்தகவல் சேவை, முழுக்க முழுக்க வாடிக்கையாளரின் விருப்பத்தை பொறுத்தது. அச்சேவை தேவையில்லை என்றால், அதற்கான கட்டணம் அவரிடம் வசூலிக்கப்பட மாட்டாது. மோசடிஅதே சமயம், குறுந்தகவல் எச்சரிக்கை சேவைக்கான கட்டணம், காப்பீட்டிற்கான பிரிமியத்தை போன்றது. ஒரு மோசடி தடுக்கப்பட்டால் கூட, காப்பாற்றப்படும் தொகைக்கு அது நிகராகாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான வங்கிகள், இதே கருத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி, உத்தரவிடாமல், யோசனை மட்டுமே தெரிவித்திருப்பதால், அதன் கருத்தை, வங்கிகள் நடைமுறைக்கு கொண்டு வருவது தற்போதைக்கு சாத்தியம்இல்லை என்று தெரிகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)