‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’ ... ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.50 ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.50 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடனாளி, உத்தரவாதம் அளித்தோர் படங்கள் வெளியீடுவங்கிசாரா நிதி நிறுவனங்கள் நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2013
00:02

புதுடில்லி: வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோர் மற்றும் அக் கடனுக்கு உத்தரவாதம் அளித்தோரின் புகைப்படங்களை, வங்கிகள், பத்திரிகையில் வெளியிட்டு, அவமானப்படுத்தி வருகின்றன.
தற்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்களும், இத்தகைய நடைமுறையை பின்பற்றத் துவங்கியுள்ளன.
வசூலாகாத கடன்: டாட்டா குழுமம், உப்பு முதல் உருக்கு வரை சகல துறைகளிலும் வியாபித்துள்ளது. இக்குழுமத்தை சேர்ந்த டாட்டா கேப்பிட்டல் பைனான்சியல் சர்வீசஸ் (டி.சி.எப். எஸ்.,) நிறுவனம், 15 கோடி ரூபாயை, ஜலந்தரை சேர்ந்த சமீத் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால் இந்நிறுவனம், கடனை திரும்பச் செலுத்தாததால், அதை, வசூலாகாத கடன் பிரிவில் சேர்த்து, சட்ட ரீதியாக வசூலிக்கும் நடவடிக்கையில் டி.சி.எப்., ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம், வசூலாகாத கடன் தொடர்பான விவரத்தை, பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது. அதில், சமீத் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களும், கடனுக்கு உத்தரவாதம் அளித்தோருமான, நீல் சஹால், சரன்ஜித் கவுர் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
சமூக மதிப்பு:பொதுமக்கள், சமீத் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் அதன் கடனுக்கு உத்தரவாதம் அளித்த இருவருடன், எவ்விதமான வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என, விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இனி, இதர வங்கி சாரா நிதி நிறுவனங்களும், கடனாளி மட்டுமின்றி, கடனுக்கு உத்தரவாதம் அளித்தோரின் புகைப்படங்களையும் வெளியிட்டு, சமூகத்தில் அவர்களின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என, தெரிகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)