பதிவு செய்த நாள்
31 அக்2013
00:02
புதுடில்லி: வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோர் மற்றும் அக் கடனுக்கு உத்தரவாதம் அளித்தோரின் புகைப்படங்களை, வங்கிகள், பத்திரிகையில் வெளியிட்டு, அவமானப்படுத்தி வருகின்றன.
தற்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்களும், இத்தகைய நடைமுறையை பின்பற்றத் துவங்கியுள்ளன.
வசூலாகாத கடன்: டாட்டா குழுமம், உப்பு முதல் உருக்கு வரை சகல துறைகளிலும் வியாபித்துள்ளது. இக்குழுமத்தை சேர்ந்த டாட்டா கேப்பிட்டல் பைனான்சியல் சர்வீசஸ் (டி.சி.எப். எஸ்.,) நிறுவனம், 15 கோடி ரூபாயை, ஜலந்தரை சேர்ந்த சமீத் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால் இந்நிறுவனம், கடனை திரும்பச் செலுத்தாததால், அதை, வசூலாகாத கடன் பிரிவில் சேர்த்து, சட்ட ரீதியாக வசூலிக்கும் நடவடிக்கையில் டி.சி.எப்., ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம், வசூலாகாத கடன் தொடர்பான விவரத்தை, பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது. அதில், சமீத் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களும், கடனுக்கு உத்தரவாதம் அளித்தோருமான, நீல் சஹால், சரன்ஜித் கவுர் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
சமூக மதிப்பு:பொதுமக்கள், சமீத் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் அதன் கடனுக்கு உத்தரவாதம் அளித்த இருவருடன், எவ்விதமான வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என, விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இனி, இதர வங்கி சாரா நிதி நிறுவனங்களும், கடனாளி மட்டுமின்றி, கடனுக்கு உத்தரவாதம் அளித்தோரின் புகைப்படங்களையும் வெளியிட்டு, சமூகத்தில் அவர்களின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என, தெரிகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|