பதிவு செய்த நாள்
31 அக்2013
00:06
புதுடில்லி: மிளகாய் அதிகளவில் உற்பத்தி ஆகும் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், கடுமையாக மழை பெய்து வருவதால், இதன் உற்பத்தி குறையும் என்ற அச்சப்பாடு எழுந்துள்ளது.இதனால், உள்நாட்டு சந்தை யில் கடந்த ஒரு சில தினங்களாக, மிளகாய் வற்றல் விலை உயர்ந்து வருகிறது.
முன்னணி நாடு:உலகளவில், மிளகாய் உற்பத்தியில், இந்தியா முன்னணி நாடாக உள்ளது. தற்போது, உள்நாட்டில் மிளகாய் உற்பத்தி, 13–14 லட்சம் டன்னாக உள்ளது. இது, உலக உற்பத்தியில், 45 சதவீதமாகும்.ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மத்திய பிரதேசத்தில், காய்ப்பு துவங்கிஉள்ள நிலையில், அதிக மழைப் பொழிவால் மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இருப்பினும், ஆந்திராவில், தற்போது தான் மிளகாய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில், மிளகாய் பயிர் பாதிப்புக்குள்ளாகாது என்ற மதிப்பீடும் உள்ளது.
கடந்த 2012–13ம் பருவத்தில், நாட்டின் மிளகாய் உற்பத்தி, 11–11.50 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, முந்தைய பருவத்தை விட, 15–20 சதவீதம் குறைவாகும்.முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனத்தில், ஒரு குவிண்டால், மிளகாயின் விலை, 6,264.70 ரூபாயாக உள்ளது.
மேற்கண்ட இரு மாநிலங்கள் தவிர, ஒட்டு மொத்த அளவில் பார்க்கும் போது, நடப்பு பருவத்தில், மிளகாய் வற்றல் உற்பத்தி கடந்த பருவத்தை போன்றே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதர பயிர் சாகுபடி:கடந்த ஒரு சில ஆண்டுகளாக, உள்நாட்டில், மிளகாய் வற்றல் விலை நிலையாக உள்ளது. இதன் காரணமாக, பல விவசாயிகள் அதிக வருவாய் அளிக்ககூடிய, பருத்தி உள்ளிட்ட இதர பயிர் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
மிளகாய் வற்றல் கையிருப்பு குறைவாக உள்ளது. என்றாலும், நவம்பர் மாதத்திற்கு பிறகு தான், இதன் உற்பத்தி எந்த அளவிற்கு இருக்கும் என்று துல்லியமாக மதிப்பிடமுடியும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நடப்பு 2013–14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், மிளகாய் வற்றல் ஏற்றுமதி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 19 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த2012–13ம் நிதியாண்டில், மிளகாய்வற்றல் ஏற்றுமதி, 2.81 லட்சம் டன்னாக இருந்தது. இது, மதிப்பின் அடிப்படையில், 2,261 கோடி ரூபாயாக இருந்தது.
ஏற்றுமதி:இது, முந்தைய ஆண்டு ஏற்று மதியை விட, அளவின் அடிப்படையில், 17 சதவீதம் மற்றும் மதிப்பின் அடிப்படையில், 5 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2011–12ம் நிதிஆண்டில், நாட்டின் மிளகாய் வற்றல் ஏற்றுமதி, 2.41 லட்சம் டன்னாக இருந்தது. இது, மதிப்பின் அடிப்படையில், 2,144 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|