பதிவு செய்த நாள்
01 நவ2013
00:23
விருதுநகர்: தீபாவளியையொட்டி எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றின் விலை உயராததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழக அளவில், எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றின் விலையை நிர்ணயிப்பதில், விருதுநகர் சந்தை, முக்கிய பங்கு வகிக்கிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில், இவற்றின் விலை உயர்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஆச்சரியப்படத்தக்க அளவில் விலையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. கடந்த சில வாரங்களைப் போலவே, கடலை எண்ணெய் விலை, (15 கிலோ டின்) 1,350 ரூபாய், நல்லெண்ணெய் 2,900 ரூபாய், சன்பிளவர் எண்ணெய் 1,400 ரூபாய் என்ற அளவில் உள்ளது. பாமாயில் மட்டும் டின்னுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 1,015 ரூபாயாக உள்ளது. அதேசமயம், 100 கிலோ சர்க்கரை மூட்டை 3,135 ரூபாய், 90 கிலோ மைதா 3,110 ரூபாய், ரவை 3,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றின் விலைகளில் மாற்றமில்லை.மொத்த வியாபாரி முருகேசன் கூறும்போது, ''கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை பொய்த்து, கடுமையான வறட்சி ஏற்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் இருந்து பொருட்களை வாங்க வருவோர், வழக்கமான அளவை விட குறைவாகவே பொருட்களை வாங்குகின்றனர்.அதே நேரம், எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றின் வரத்து அதிகமாக உள்ளது. வரத்து அதிகரித்து, விற்பனை குறைந்துள்ளதால், விலை உயரவில்லை. பருப்பு விலை மட்டும் சற்று உயர்ந்துள்ளது. மொத்தத்தில், இந்தாண்டு தீபாவளி விற்பனை மந்தமாக உள்ளது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|