பதிவு செய்த நாள்
01 நவ2013
00:32
மும்பை: நடப்பு 2013ம் ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில்,1,600 கோடி டாலரை முதலீடு செய்துள்ளதாக, தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், பல நிறுவனங்களின் செயல்பாடு நன்கு உள்ளதையடுத்து, கடந்த ஒரு சில வாரங்களாக, நாட்டின் பங்கு வர்த்தகம் சூடுபிடித்து காணப்படுகிறது.
பங்கு முதலீடுஅன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடும் அதிகரித்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற புதன்கிழமை அன்று, 16.60 கோடி டாலர் மதிப்பிற்கு நிறுவனப்பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அக்டோபர் 30ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில்,
அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, 260 கோடி டாலராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, 200 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், நடப்பாண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், 360 கோடி டாலர் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்திருந்தன.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நுகர் பொருள் துறை நிறுவனப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்திருந்தன. நுகர்பொருள்கணக்கீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த 16 நிறுவனங்களுள், 12 நிறுவனங்களில் அதன் பங்கு மூலதனத்தை அதிகரித்து கொண்டுள்ளன.
அன்னிய நிதி நிறுவனங்கள், கடந்த ஜூன் மாதத்தில், எச்.டீ.ஐ.எல்., நிறுவனத்தில், 28.46 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டிருந்தன. இது, செப்டம்பர் மாதத்தில், 33.64 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆக, கணக்கீட்டு காலத்தில், இந்நிறுவனத்தில், இவற்றின் பங்கு முதலீடு, 5.18 சதவீதம் உயர்ந்துள்ளது.
டெக் மகிந்திராஇதே காலத்தில், டாட்டா குளோபல் பீவரேஜ் நிறுவனத்தில், இந் நிறுவனங்களின் பங்கு முதலீடு, 2.76 சதவீதம் அதிகரித்து, 17.85 சதவீதத்திலிருந்து, 20.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆக்சிஸ் பேங்கில், இவற்றின் பங்கு மூலதனம், 2.67 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40.70 சதவீதத்திலிருந்து, 43.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டெக் மகிந்திரா நிறுவனத்தில், இவற்றின் பங்கு மூலதனம், 2.53 சதவீதம் உயர்ந்து, 30.06 சதவீதத்திலிருந்து,32.59 சதவீதமாகஅதிகரித்துள்ளது.டைட்டான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், அன்னிய நிதிநிறுவனங்களின் பங்கு மூலதனம், 2.31 சதவீதம் அதிகரித்து, 20.12சதவீதத்திலிருந்து,22.43 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேற்கண்டவை தவிர, பவர் கிரிட் (16.87 சதவீதம்), யுனை டெட் பாஸ்பரஸ் (39.77), பாரத் போர்ஜ் (11.25), ரிலையன்ஸ் இன்ப்ரா (16.57), மற்றும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (33.58 சதவீதம்) ஆகிய நிறுவனங்களிலும், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.
உள்நாட்டு நிதி நிறுவனங்கள்நடப்பு ஆண்டில், இதுவரையிலுமாக, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், இதுவரையிலுமாக, இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட மொத்த முதலீட்டில்,69,431 கோடிரூபாயை(1,000 கோடிடாலர்) விலக்கி கொண்டுள்ளன. சென்றஅக்டோபர் மாதத்தில் மட்டும்,இந்நிறுவனங்கள், 190 கோடி டாலர் மதிப்பிற் கான பங்குகளை விற்பனை செய்துஉள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|