பதிவு செய்த நாள்
02 நவ2013
01:12
மும்பை:பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், டி.சி.எஸ்., என்று சுருக்கமாக அழைக்கப்படும், டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்.,) மற்றும் ஐ.டி.சி., ஆகிய நிறுவனங்கள் முறையே, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
பங்குகளின் சந்தை மதிப்பு என்பது, ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை, பங்குச் சந்தையில் வர்த்தகமாகும், அதன் ஒரு பங்கின் விலையை கொண்டு பெருக்கி கிடைக்கும் தொகையாகும்.இவ்வகையில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் பங்குகளின்சந்தை மதிப்பு, 4,12,943 கோடி ரூபாயாக உள்ளது. ஆர்.ஐ.எல்., நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு, 2,94,778 கோடி ரூபாயாகவும், ஐ.டி.சி., நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு, 2,64,943 கோடி ரூபாயாகவும் உள்ளன.
இந்நிறுவனங்களையடுத்து. ஓ.என்.ஜி.சி., (2.51 லட்சம் கோடி ரூபாய்), இன்போசிஸ் (1.90 லட்சம் கோடி), கோல் இந்தியா (1.82 லட்சம் கோடி), எச்.டீ.எப்.சி., பேங்க் (1.62 லட்சம் கோடி), பார்தி ஏர்டெல் (1.46 லட்சம் கோடி), எச்.டீ.எப்.சி., நிறுவனம் (1.33 லட்சம் கோடி), இந்துஸ்தான் யூனிலிவர் (1.32 லட்சம் கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|