பதிவு செய்த நாள்
02 நவ2013
01:19
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்றும் ஓரளவிற்கு நன்கு இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. இதுவும், இந்திய பங்கு
வர்த்தகத்தி்ற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, உலோகம் மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்குகைமாறின.அதே
சமயம், நுகர்பொருட்கள், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர்
சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 32.29
புள்ளிகள் அதிகரித்து,21,196.81 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 21,293.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 21,141.32 புள்ளிகள் வரையிலும் சென்றது. சென்செக்ஸ் கணக்கிடஉதவும், 30 நிறுவனங்களுள், எஸ்.பீ.ஐ., மகிந்திரா, ஜிந்தால் ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலைஉயர்ந்தும்,ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., இன்போசி்ஸ், கெயில் உள்ளிட்ட , 10 நிறுவனப் பங்குகளின் விலை
சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், நிப்டி, 8.05 புள்ளிகள் உயர்ந்து, 6,307.20
புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 6,332.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,286.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
முகூர்த்த வணிகம்...தீபாவளியை முன்னிட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், மாலை 6.15 மணி முதல் 7.30 மணி வரை, 75
நிமிடங்களுக்கு சிறப்பு முகூர்த்த வணிகம் நடைபெற உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|