பதிவு செய்த நாள்
02 நவ2013
01:22
புதுடெல்லி:நாட்டின் நிதிப்பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டின் ஏப்., – செப்., வரையிலான ஆறு மாத காலத்தில், 4.12 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இது, நடப்பு, 2013–14ம் முழு நிதியாண்டின் பட்ஜெட் இலக்கு அளவான, 5.42 லட்சம் கோடி ரூபாயில், 76 சதவீதம் ஆகும். சென்ற 2012–13ம் நிதியாண்டின், இதே காலத்தில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பிட்டில், 65.6 சதவீதமாக இருந்தது.
அரசின் வருவாய்க்கும், செலவினத்திற்கும் உள்ள வித்தியாசம், நிதிப்பற்றாக்
குறையாகும்.இதன்படி, நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில், மத்திய அரசின் மொத்த வருவாய், 3.07 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
அதே சமயம், அரசின் செலவினம், 8.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, 4.12 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வரி இனங்கள் வாயிலான வருவாய், 11,22,799 கோடி ரூபாயாகவும், செலவினங்கள், 16,65,297 கோடி ரூபாயாகவும் இருக்கும் என,
மதிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் நிதிப்பற்றாக்குறை, 5.42 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,இந்த இலக்கில், அரையாண்டு காலத்திலேயே, 76 சதவீதம் எட்டப்பட்டு விட்டதால், பட்ஜெட் மதிப்பீட்டை விட, நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற 2012–13ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 4.9
சதவீதமாக இருந்தது. இதை, நடப்பு நிதியாண்டில், 4.8 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|