குறைகிறது நெல் விலைகுறைகிறது நெல் விலை ... ரப்பர் விலை சரிவால் டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் மகிழ்ச்சி ரப்பர் விலை சரிவால் டயர் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் மகிழ்ச்சி ...
கோதுமை, பருப்பு, கடுகு சாகு­படி பரப்­ப­ளவில் சாதனை : 64.70 லட்சம் ஹெக்­டேரை எட்­டி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2013
00:37

நவம்பர் 1ம் தேதி நில­வ­ரப்­படி, நாட்டின் கோதுமை, கடுகு சாகு­படி பரப்­ப­ளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, சாதனை அள­வாக, 208 சத­வீதம் உயர்ந்து, 64.70 லட்சம் ஹெக்­ேட­ராக அதி­க­ரித்­துள்­ளது.தென் மேற்கு பரு­வ­மழைக் காலம் முடிந்த பின்­னரும், நாட்டின் பல பகு­தி­களில், அவ்­வப்­போது மழை பெய்து வரு­கி­றது.விதைப்பு பணி:இதனால், ஈரப்­ப­த­மான நிலத்தை, ரபி பயிர்­களின் சாகு­ப­டிக்­காக, விவ­சா­யிகள் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். குறிப்­பாக, கோதுமை, கடுகு, பருப்பு வகை­களின் விதைப்பு பணி­களில், விவ­சா­யிகள் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­றனர்.இது குறித்து, மத்­திய வேளாண் அமைச்­சக அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

வழக்­க­மாக, தீபா­வ­ளிக்குப் பிற­குதான், விவ­சா­யிகள் ரபி பருவ பயிர்­களின் விதைப்பு பணியில் ஈடு­ப­டுவர். ஆனால், இந்த ஆண்டு, விவ­சா­யிகள், தீபா­வளி பண்­டிகை வரை காத்­தி­ருக்­காமல், தீவி­ர­மாக விதைப்பு பணி­களில் ஈடு­பட்­டு உள்­ளனர். சாத­க­மான மண் வளத்தை பயன்­ப­டுத்தி, வருவாய் ஈட்டும் நோக்­குடன், அவர்கள் தீவி­ர­மாக விதைப்பு பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். வரும் மாதங்­க­ளிலும், இதே நிலை தொடர்ந்தால், ரபி பருவ உணவு தானி­யங்­களின் உற்­பத்­தியில் புதிய சாதனை படைக்­கப்­படும்.பார்­லிமென்ட் தேர்தல் வரு­வதால், பண­வீக்­கத்­தையும், விலை­வா­சி­யையும் கட்­டுப்­ப­டுத்த, மத்­திய அரசு பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது. உணவு தானியங்கள்இந்த சம­யத்தில், உணவு தானி­யங்­களின் உற்­பத்தி அதி­க­ரிப்­பது, மத்­திய அர­சுக்கு சாத­க­மாக இருக்கும். இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.நடப்பு நவம்பர் மாதம் 1ம் தேதி நில­வ­ரப்­படி, நாட்டின் கோதுமை பயி­ரிடும் பரப்­ப­ளவு,4.15 லட்சம் ஹெக்­ேட­ராக உள்­ளது. இது, சென்ற, 2012ம் ஆண்டின் இதே காலத்தில், 83 ஆயிரம் ஹெக்­ேட­ராக மிகவும்குறைந்து காணப்­பட்­டது.

பூச்சி தாக்குதல்:கரீப் பருவ பயிர்கள், அவற்றின் வளர்ச்சிக் காலத்தின் பிற்­ப­கு­தியில், பூச்சித் தாக்­கு­த­லுக்கு ஆளாக வாய்ப்­புள்­ளது. ஆனால், ரபி பருவ பயிர்­களில், இத்­த­கைய தாக்­குதல், மிகக் குறை­வா­கவே இருக்கும்."அதனால், நடப்­பாண்டு, கோதுமை, கொண்­டைக்­க­டலை மற்றும் கடுகு ஆகி­ய­வற்றின் உற்­பத்­தியில் புதிய சாதனை படைக்­கப்­படும்"என, வேளாண் செல­வி­னங்கள் மற்றும் விலைகள் ஆணை­யத்தின் தலைவர் அசோக்குலாட்டி கூறினார்.
மேற்­கண்ட மூன்று உணவு தானி­யங்­களின் பயி­ரிடும் பரப்­ப­ளவு,மத்­திய பிர­தே­சத்தில், 2,000 ஹெக்ே­டரில் இருந்து, 3.21 லட்சம் ஹெக்­ேட­ராக உயர்ந்­துள்­ளது.ரபி பரு­வத்தில், பஞ்சாப், அரி­யானா, மத்­திய பிர­தேசம், உத்­தர பிர­தேசம் ஆகிய மாநி­லங்­களில், 2.8 கோடி ஹெக்ேடர் பரப்­ப­ளவில், கோதுமை பயி­ரி­டப் ­பட்­டுள்­ளது.

மதிப்­பீட்டு காலத்தில், கடுகு பயி­ரிடும் பரப்­ப­ளவு, 17 லட்சம் ஹெக்­ேட­ராக உயர்ந்­துள்­ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தை விட, 110 சத­வீதம் அதி­க­மாகும்.
தண்ணீர் இருப்பு:மத்­திய நீர் ஆணையம் வெளி­யிட்­டுள்ள புள்ளி விவ­ரத்தின் படி, நாடு முழு­வதும் உள்ள, 85 முக்­கியஅணைக்­கட்­டு­களில், பாச­னத்­திற்­காக 13,410 கோடி க.செமீ., தண்ணீர் இருப்பு உள்­ளது.இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில் காணப்­பட்­டதை விட, 122 சத­வீ­தமும், கடந்த 10 ஆண்டு கால சரா­சரி அளவை விட, 123 சத­வீ­தமும் அதிகம்.ஆக, விவ­சா­யத்திற்கு ஏற்ற சூழல் நில­வு­வதால், ரபி பரு­வத்தில் பயிர்­களின் விளைச்சல் வழக்­கத்தை விட, மேம்­படும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)