பதிவு செய்த நாள்
05 நவ2013
00:37
நவம்பர் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் கோதுமை, கடுகு சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, சாதனை அளவாக, 208 சதவீதம் உயர்ந்து, 64.70 லட்சம் ஹெக்ேடராக அதிகரித்துள்ளது.தென் மேற்கு பருவமழைக் காலம் முடிந்த பின்னரும், நாட்டின் பல பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது.விதைப்பு பணி:இதனால், ஈரப்பதமான நிலத்தை, ரபி பயிர்களின் சாகுபடிக்காக, விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கோதுமை, கடுகு, பருப்பு வகைகளின் விதைப்பு பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வழக்கமாக, தீபாவளிக்குப் பிறகுதான், விவசாயிகள் ரபி பருவ பயிர்களின் விதைப்பு பணியில் ஈடுபடுவர். ஆனால், இந்த ஆண்டு, விவசாயிகள், தீபாவளி பண்டிகை வரை காத்திருக்காமல், தீவிரமாக விதைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். சாதகமான மண் வளத்தை பயன்படுத்தி, வருவாய் ஈட்டும் நோக்குடன், அவர்கள் தீவிரமாக விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வரும் மாதங்களிலும், இதே நிலை தொடர்ந்தால், ரபி பருவ உணவு தானியங்களின் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்படும்.பார்லிமென்ட் தேர்தல் வருவதால், பணவீக்கத்தையும், விலைவாசியையும் கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உணவு தானியங்கள்இந்த சமயத்தில், உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிப்பது, மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.நடப்பு நவம்பர் மாதம் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் கோதுமை பயிரிடும் பரப்பளவு,4.15 லட்சம் ஹெக்ேடராக உள்ளது. இது, சென்ற, 2012ம் ஆண்டின் இதே காலத்தில், 83 ஆயிரம் ஹெக்ேடராக மிகவும்குறைந்து காணப்பட்டது.
பூச்சி தாக்குதல்:கரீப் பருவ பயிர்கள், அவற்றின் வளர்ச்சிக் காலத்தின் பிற்பகுதியில், பூச்சித் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. ஆனால், ரபி பருவ பயிர்களில், இத்தகைய தாக்குதல், மிகக் குறைவாகவே இருக்கும்."அதனால், நடப்பாண்டு, கோதுமை, கொண்டைக்கடலை மற்றும் கடுகு ஆகியவற்றின் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்படும்"என, வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தலைவர் அசோக்குலாட்டி கூறினார்.
மேற்கண்ட மூன்று உணவு தானியங்களின் பயிரிடும் பரப்பளவு,மத்திய பிரதேசத்தில், 2,000 ஹெக்ேடரில் இருந்து, 3.21 லட்சம் ஹெக்ேடராக உயர்ந்துள்ளது.ரபி பருவத்தில், பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 2.8 கோடி ஹெக்ேடர் பரப்பளவில், கோதுமை பயிரிடப் பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், கடுகு பயிரிடும் பரப்பளவு, 17 லட்சம் ஹெக்ேடராக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே காலத்தை விட, 110 சதவீதம் அதிகமாகும்.
தண்ணீர் இருப்பு:மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாடு முழுவதும் உள்ள, 85 முக்கியஅணைக்கட்டுகளில், பாசனத்திற்காக 13,410 கோடி க.செமீ., தண்ணீர் இருப்பு உள்ளது.இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் காணப்பட்டதை விட, 122 சதவீதமும், கடந்த 10 ஆண்டு கால சராசரி அளவை விட, 123 சதவீதமும் அதிகம்.ஆக, விவசாயத்திற்கு ஏற்ற சூழல் நிலவுவதால், ரபி பருவத்தில் பயிர்களின் விளைச்சல் வழக்கத்தை விட, மேம்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|