புதிய செடான் கார்கள் அறிமுகம்: டாடா மோட்டார்ஸ்புதிய செடான் கார்கள் அறிமுகம்: டாடா மோட்டார்ஸ் ... அன்­னிய செலா­வணி கையி­ருப்பு: 28,129 கோடி டால­ராக சரிவு அன்­னிய செலா­வணி கையி­ருப்பு: 28,129 கோடி டால­ராக சரிவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தேயிலை உற்­பத்தி 119 கோடி கிலோ­வாக வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2013
00:36

கோல்­கட்டா:நடப்பு, 2013ம் ஆண்­டிலும், நாட்டின் தேயிலை உற்­பத்தி, 100 கோடி கிலோவை தாண்டி, 119 கோடி கிலோ­வாக வளர்ச்சி காணும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.கடந்த, 2012ம் ஆண்டில், நாட்டின் தேயிலை உற்­பத்தி, 113 கோடி கிலோ­வாக இருந்­தது என, இந்­திய தேயிலை வாரியம் தெரி­வித்து உள்­ளது.
இரண்­டா­வது இடம்:உல­க­ளவில், தேயிலை உற்பத்தி மற்றும் பயன்­பாட்டில், இந்­தியா இரண்­டா­வது மிகப் பெரிய நாடாக உள்­ளது. கடந்த ஒரு சில ஆண்­டு­க­ளாக, நாட்டின் தேயிலை உற்­பத்தி, சிறப்­பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இது­கு­றித்து, இந்­திய தேயிலை வாரி­யத்தின் தலைவர் அருண் என்.சிங் கூறி­ய­தா­வது:கடந்த, 2012ம் ஆண்டை விட, நடப்­பாண்டில் தேயிலை உற்­பத்தி, 6 கோடி கிலோ அதி­க­ரித்து, 118.50 – 119 கோடி கிலோ­வாக உயர வாய்ப்­புள்­ளது.நடப்­பாண்டின், ஜன­வரி முதல் செப்­டம்பர் வரை­யி­லான ஒன்­பது மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்­பத்தி, கடந்­தாண்டின் இதே காலத்தை விட, 5.36 கோடி கிலோ அதி­கரித்து, 80.80 கோடி கிலோ­விலி­ருந்து, 86.16 கோடி கிலோ­வாக உயர்ந்துள்­ளது.
நடப்­பாண்டின் முதல் ஒன்­பது மாதங்­களில், வட மாநி­லங்­களில் தேயிலை உற்­பத்தி, 69.09 கோடி கிலோ­வா­கவும், தென் மாநி­லங்­களில் இதன் உற்­பத்தி, 17.07 கோடி கிலோ­வா­கவும் இருந்­தது. இவ்­வாறு, அருண் சிங் தெரிவித்தார்.அசாம் மாநிலம்:நடப்­பாண்டின் முதல் ஒன்­பது மாத காலத்தில், உள்­நாட்டு தேயிலை உற்­பத்­தியில், அதிக பங்­க­ளிப்பை கொண்­டுள்ள அசாம் மாநி­லத்தில், இதன் உற்­பத்தி, 44.71 கோடி கிலோ­வாக அதி­க­ரித்து உள்­ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 43.30 கோடி கிலோ­வாக இருந்தது.
இது­கு­றித்து, வட­கி­ழக்கு மாநில தேயிலை கூட்­ட­மைப்பின் தலைவர் பித்­யா­னந்தா பர்­க­கோடி கூறி­ய­தா­வது:நடப்­பாண்டில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்­பத்தி மிகவும் சிறப்­பாக இருக்கும் என, எதிர்­பார்க்­கிறோம். மாநிலத்தில், தேயிலை அதிகம் உற்­பத்­தி­யாகும் பகு­தி­களில், தட்­ப­வெப்ப நிலை சாத­க­மாக இருப்­ப­துடன், பூச்சி தாக்­கு­தலும் மிகவும் குறை­வாக உள்­ளது.
கடந்த, 2012ம் ஆண்டில், மாநி­லத்தின் தேயிலை உற்­பத்தி, 58 கோடி கிலோ­வாக இருந்­தது. சென்ற அக்­டோபர் மாதத்தில் பெய்த மழையும், தேயிலை சாகு­ப­டிக்கு உறு­து­ணை­யாக உள்ளது. தற்­போ­தைய தட்­ப­வெப்ப நிலை நீடிக்கும் நிலையில், மாநி­லத்தின் தேயிலை உற்­பத்தி நடப்­பாண்டில், புதிய சாதனை அளவை எட்டும்.
நாட்டின் ஒட்டு மொத்த தேயிலை உற்­பத்­தியில், அசாம் மாநி­லத்தின் பங்­க­ளிப்பு, 53 சத­வீத அள­விற்கு உள்­ளது. மேலும், இங்கு உற்­பத்­தி­யாகும் தேயி­லை­யி­லி­ருந்து தயா­ரிக்­கப் ­படும் தேநீர் மிகவும் சுவை­யானது. இவ்­வாறு, பித்­யா­னந்தா கூறினார்.கறுப்பு தேயிலை உற்­பத்தி:சர்­வ­தேச அளவில், கறுப்பு தேயிலை உற்­பத்தி, நடப்­பாண்டு ஜன­வரி முதல் செப்­டம்பர் வரை­யி­லான, ஒன்­பது மாத காலத்தில், 8.40 சத­வீதம் அதி­க­ரித்து, 158 கோடி கிலோ­வாக வளர்ச்சி கண்­டுள்­ளது.
இது, கடந்­தாண்டின் இதே காலத்தில், 146 கோடி கிலோ­வாக இருந்தது.கறுப்பு தேயிலை உற்­பத்­தியில், இந்­தியா முன்­னணி நாடு­களுள் ஒன்­றாக திகழ்­கி­றது.மதிப்­பீட்டு காலத்தில், நம் நாடு, 86 கோடி கிலோ கறுப்பு தேயி­லையை உற்­பத்தி செய்­துஉள்­ளது. இதில், வட மாநி­லங்­களின் பங்­க­ளிப்பு, 69 கோடி கிலோ­வா­கவும், தென் மாநி­லங்­களின் பங்­க­ளிப்பு, 17 கோடி கிலோ­வா­கவும் உள்­ளது.கென்யா:சாத­க­மற்ற வானி­லையால், இலங்கை மற்றும் கென்யா ஆகிய நாடு­களில், கறுப்பு தேயிலை உற்­பத்தி குறைந்­து உள்­ளது.
கணக்­கீட்டு காலத்தில், கென்­யாவில் கறுப்பு தேயிலை உற்­பத்தி, 15 லட்சம் கிலோ குறைந்து, 3.20 கோடி கிலோ­வா­கவும், இலங்­கையில் இதன் உற்­பத்தி, 24.40 லட்சம் கிலோ குறைந்து, 2.50 கோடி கிலோ­வா­கவும் சரி­வ­டைந்து உள்­ளது.இருப்­பினும், ஒட்டு மொத்த அளவில், சர்­வ­தேச கறுப்பு தேயிலை உற்­பத்தி, நடப்­பாண்டில், 480 கோடி கிலோ­வாக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டு்ள்­ளது. கடந்த, 2012ம் ஆண்டில், இதன் உற்­பத்தி, 460 கோடி கிலோ­வாக இருந்­தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)