பதிவு செய்த நாள்
10 நவ2013
00:39

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 166 கோடி டாலர் (9,960 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 28,129 கோடி டாலராக (16.88 லட்சம் கோடி ரூபாய்) சரிவு அடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது,அதேசமயம், முந்தைய வாரத்தில், அன்னியச் செலாவணி வரத்து, 183 கோடி டாலர் (10,980 கோடி ரூபாய்) அதிகரித்து, 28,295 கோடி டாலராக (16.98 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது.தொடர்ந்து நான்கு வாரங்களாக, அதிகரித்து வந்த நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பீட்டு வாரத்தில் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 89.42 கோடி டாலர் சரிவடைந்து உள்ளது. இதே போன்று, கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும், 53.81 கோடி டாலர் குறைந்து, 2,123 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.மேலும், எஸ்.டீ.ஆர்., மற்றும் சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்து உள்ள செலாவணிகளின் மதிப்பும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|