பதிவு செய்த நாள்
10 நவ2013
00:40

நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 381 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நடந்தது. முட்டை உற்பத்தி, சந்தை நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 376 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, ஐந்து காசுகள் உயர்த்தி, 381 காசுகளாக நிர்ணயம் செய்ய, கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டது.தற்போது, நுகர்வு அதிகரித்து வருவதால், முட்டை விலையும் உயர்ந்துள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 370, பெங்களூரு, 365, மைசூரு, 370, ஐதராபாத், 358, மும்பை, 394, விஜயவாடா, 352, கோல்கட்டா, 405, பர்வாலா, 371, டில்லி, 388.இவ்வாறு, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை, 61 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 5 ரூபாய் உயர்த்தப்பட்டு, 45 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|