பதிவு செய்த நாள்
12 நவ2013
00:26
மும்பை:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, கடந்தாண்டின் இதே மாதத்தை விட, மூன்று மடங்கு அதிகரித்து, 1.22 லட்சம் டன்னிலிருந்து, 3.86 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகள், அதிகளவில் இறக்குமதி செய்து கொண்டுள்ளதையடுத்து, நாட்டின் ஒட்டு மொத்த புண்ணாக்கு ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17.49 லட்சம் டன்னிலிருந்து, 20.19 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, தென்கொரியா, நம்நாட்டிலிருந்து, 6.40 லட்சம் டன் புண்ணாக்கை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4.92 லட்சம் டன்னாக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், ஈரானுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 6.05 லட்சம் டன்னாகவும், தாய்லாந்து நாட்டிற்கான ஏற்றுமதி, 1.49 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|