பதிவு செய்த நாள்
12 நவ2013
00:27
புதுடில்லி:நடப்பு, 2013–14ம் சந்தைப் பருவத்தில் (ஆக., – ஜூலை), நாட்டின் பருத்தி ஏற்றுமதி, சென்ற பருவத்தை விட, 9 சதவீதம் சரிவடைந்து, 90 லட்சம் பொதிகளாக (1 பொதி–170 கிலோ) குறையும் என, அமெரிக்க வேளாண் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சர்வதேச சந்தை:மேலும், அதில் கூறப்பட்டுள்ள விவரம்:சர்வதேச சந்தையுடன் ஒப்பிடும்போது, இந்தி யாவில் பருத்தியின் விலை அதிகரித்து உள்ளது. அதே சமயம், உள்நாட்டில், அதன் தேவை குறைந்துள்ளது.சென்ற, 2012–13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்தியா, 99 லட்சம் பருத்தி பொதிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இது, நடப்பு பருவத்தில், 90 லட்சம் பொதிகளாக குறையும்.சீனா:இந்தியா, சீனாவிற்கு அதிக அளவில் பருத்தியை ஏற்றுமதி செய்கிறது. நடப்பு பருவத்தில், சீனாவில், பருத்திக்கான தேவை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி சரிவுஅடைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், இந்தியா, 4,92,565 பருத்தி பொதிகளை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.அதே சமயம், உள்நாட்டில் பருத்தி உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி:ஆனால், பருத்திக்கான தேவை குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், நாட்டின் பருத்தி உற்பத்தி, சாதனை படைக்கும் வகையில், 3.72 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், இதே காலத்தில், பருத்திக்கான தேவை, 2.95 கோடி பொதிகள் என்ற அளவிற்கே இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், பருத்தியின் விலை சரிவடைய வாய்ப்புஉள்ளது.இவ்வாறு, அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|