பதிவு செய்த நாள்
12 நவ2013
10:24
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(நவ., 12ம் தேதி, செவ்வாய்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது. பின்னர் மதியத்திற்கு மேல் சரிய தொடங்கியது.
வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 93.26 புள்ளிகள் உயர்ந்து 20,584.22-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 26.30 புள்ளிகள் உயர்ந்து 6,105.10-ஆகவும் இருந்தன. தொடர்ந்து மதியம் 1.50 மணியளவில் சென்செக்ஸ் 75.83 புள்ளிகள் சரிந்து 20,415.13-ஆகவும், நிப்டி 17.25 புள்ளிகள் சரிந்து 6,061.55-ஆகவும் இருந்தது.
ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.65 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.69 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
முன்னதாக செப்டம்பர் மாதத்துக்கான நிறுவனங்களின் உற்பத்தி நிலவரம் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர்களின் விலை நிலவரம் போன்றவை வெளியாக இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை காலை முதலே வாங்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் காலையில் ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|