பதிவு செய்த நாள்
12 நவ2013
14:24
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் அதிகளவு வரத்துவங்கியுள்ளதால், தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது.
திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, கோல்கட்டா, மகாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்தும், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கின்றன. தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்த பின்னலாடை துறைக்கு, 2011ல் ஏற்பட்ட சாய ஆலை பிரச்னை, முதல் சறுக்கலை ஏற்படுத்தியது. அதன்பின், கடுமையான மின்வெட்டு, எரிபொருள் விலை உயர்வால், பல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டன. வேலை இழந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், பின்னலாடை உ<ற்பத்தி நிறுவனங்கள் மற்றும் "ஜாப் ஒர்க்' நிறுவனங்களில், 30 முதல் 40 சதவீத தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்னையால், அந்நாடுகளில் இருந்து திருப்பூருக்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் சரிந்தன. அதனால், தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏற்றுமதி வாய்ப்பு குறைந்தபோதும், உள்நாட்டு ஆடை தேவை அதிகரித்ததால், பல ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களை பெறுவதில் ஆர்வம் காட்டின.அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. காற்றாலை மின் <<உற்பத்தி அதிகரிப்பால், மின்வெட்டும் நீங்கியது. உள்நாட்டில் பின்னலாடை உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் சீராகியுள்ளது. இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு 63 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும், ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. ஆர்டர் அதிகரித்துள்ளதால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், "ஜாப் ஒர்க்' நிறுவனங்களில் தொழிலாளர் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் <சொந்த <<ஊருக்கு சென்ற தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு வரத்துவங்கியுள்ளனர்.
பின்னலாடை தொழில் துறையினர் கூறியதாவது:பின்னலாடை துறை மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளது. இளம் தொழிலாளர் வருகை அதிகரிப்பால், தொழில்நுட்ப ரீதியாகவும், நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது; குறித்த காலத்துக்கு முன்னதாகவே ஆடைகள் உற்பத்தி செய்து அனுப்பப்படுகிறது. பாரம்பரிய சந்தைகள் மட்டுமின்றி, புதிய சந்தைகளில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. டாலர் மதிப்பும், நமது ஏற்றுமதிக்கு சாதகமாக உள்ளது. சீனாவில், தொழிலாளர் கூலி அதிகரித்துள்ளதால், அந்நாடு பொறியியல் சாதன உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்நாட்டுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்களும் திருப்பூருக்கு வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளால், பின்னலாடை தொழில் துறை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பி<யுள்ளது. இதனால் தொழிலாளர் தேவை அதிகரித்துள்ளது. வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் பின்னலாடை தொழிலுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, தொழில் துறையினர் கூறினர்.
பார்க்கும் இடமெல்லாம் "ஆட்கள் தேவை' விளம்பரம் : பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் அதிகளவில் வருவதால், பெரும்பாலான நிறுவனங்கள், நகரின் முக்கிய வீதிகள், நிறுவனங்களின் முன்பகுதி, என பார்க்கும் இடங்களில் எல்லாம் , "ஆட்கள் தேவை' என விளம்பர போர்டு வைத்துள்ளனர். சாதாரண தொழிலாளர்கள் மட்டுமின்றி, தொழில்நுட்ப துறையிலும் அதிகளவில் தொழிலாளர்களை பின்னலாடை தொழில் துறையினர் தேடுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|