பதிவு செய்த நாள்
12 நவ2013
14:29
வரும் பொங்கல் பண்டிகைக்கு, 1.5 கோடி, இலவச வேட்டி, சேலை தயாரிக்க, கைத்தறி துணி நூல் வழங்கல் துறை மூலம், 2,655 டன் நூல் வழங்கப்பட்டுள்ளது.விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள், பொங்கல் பண்டிகையை, புத்தாடை அணிந்து கொண்டாட, ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு கைத்தறி துணி நூல் வழங்கல் துறையில், 1,182 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றிடம், இலவச வேட்டி, சேலைக்கான நூல்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம், நெசவாளர்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். கமிஷன் அடிப்படையில், இந்த வேட்டி, சேலை உற்பத்தி நடக்கிறது. ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதத்தில், பொங்கலுக்கான வேட்டி, சேலை உற்பத்தியை நெசவாளர்கள் துவங்குவது வழக்கம். வரும் பொங்கல் பண்டிகைக்காக, 75.80 லட்சம் வேட்டி, 75.90 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு கைத்தறி துணி நூல் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு, 1.5 கோடி, இலவச வேட்டி, சேலை இலக்கு நிர்ணயம் செய்து, அதற்காக, தற்போது வரை, 2,655 டன் நூல், வரவழைக்கப்பட்டு, சங்கங்கள் மூலம், துணி உற்பத்திக்கு வழங்கப்பட்டு உள்ளது. எஞ்சிய, 161 டன் நூல், இம்மாத இறுதிக்குள், சங்கங்களுக்கு வழங்கி, பொங்கல் பண்டிகைக்கு முன், முழு அளவில், வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். நமது நிருபர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|