தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சிதொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சி ... பொருளாதார வளர்ச்சி மீண்டும்8 சதவீதத்தை எட்டும் – மான்டேக் பொருளாதார வளர்ச்சி மீண்டும்8 சதவீதத்தை எட்டும் – மான்டேக் ...
வர்த்தகம் » ஜவுளி
வெளிநாடுகளின் தேவை குறைவால் பருத்தி நூலிழை தேக்கம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
00:45

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், பருத்தி நூலிழைக்கான தேவை குறைந்துள்ளதால், அதன் தேக்கம் அதிகரித்துள்ளது.நடப்பு 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் பருத்தி நூலிழை உற்பத்தி, 380–390 கோடி கிலோவாகவும், உள்நாட்டு தேவை, 250 கோடி கிலோவாகவும் இருக்கும். ஊக்குவிப்பு திட்டங்கள்
சீனா மற்றும் தென்அமெரிக்க நாடுகளின் தேவை அதிகரிப்பால், பருத்தி நூலிழை ஏற்றுமதி, இதுவரை இல்லாத அளவாக, 120 கோடி கிலோவை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதற்கேற்ப, நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாதங்களில், 100 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, சீனாவின் 'ஆர்டர்' குறைந்துள்ளதால், பருத்தி நூலிழை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.
அதே சமயம், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவை இலக்காக கொண்டிருந்த சந்தை ஊக்குவிப்பு திட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால், இனி வரும் மாதங்களிலும், பருத்தி நூலிழை ஏற்றுமதி குறையும் என, திர்பார்க்கப்படுகிறது.மேலும், உள்நாட்டிலும், பணவீக்கம் காரணமாக, பருத்தி நுாலிழைக்கான தேவை குறைந்துள்ளது.
"அதனால், பருத்தி நூலிழை உற்பத்தியாளர்களிடம் சரக்குதேங்கத் துவங்கியுள்ளது" என, டெக்ஸ்ப்ரோசில் நிறுவனத்தின் துணை தலைவர் உஜ்வல் லஹோட்டி தெரிவித்தார்.இத்தகைய நிலை காரணமாக, எஞ்சிய நிதியாண்டில், 20–30 கோடி கிலோ அளவிற்கே பருத்தி நூலிழை ஏற்றுமதியாக வாய்ப்பு உள்ளதுஎன, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பருத்தி நூலிழை விலையும் சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ, '40 ' கிரேடு பருத்தி நூலிழையின் விலை, 25 ரூபாய் குறைந்து, 200 ரூபாயாகவும்,' 60' கிரேடு பருத்தி நூலிழை, 225 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.'மேற்கண்டவற்றிலும், '60' கிரேடு பருத்தி நூலிழைக்கு மட்டுமே, தற்போது வெளிநாடுகளில் தேவை உள்ளது' என, மும்பையை சேர்ந்த வர்த்தகர் பாரத் மல்கன் தெரிவித்தார்.
உபரி:மதிப்பீட்டின் படி, நடப்பு நிதியாண்டில், 120 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதி செய்யப் பட்டால் கூட, உள்நாட்டில், 130 கோடி கிலோவிற்கும் அதிகமாக உபரி கையிருப்பு இருக்கும் என, அவர் மேலும் கூறினார்.நடப்பு நிதியாண்டில், பருத்தி உற்பத்தி, 10 சதவீதம் அதிகரித்து, 420 கோடி கிலோவாகவும், உள்நாட்டு தேவை, 250 கோடி கிலோவாகவும் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)