தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சிதொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் வளர்ச்சி ... ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் - ரூ.63.30 ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் - ரூ.63.30 ...
பொருளாதார வளர்ச்சி மீண்டும்8 சதவீதத்தை எட்டும் – மான்டேக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
00:50

புதுடில்லி: இன்னும் இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மீண்டும், 8 சதவீதத்தை எட்டும் என, மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
நடப்பு 12வது ஐந்தாண்டு (2012–17) திட்ட காலத்தின், முதல் நிதி ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதம் என்ற அளவில் குறைந்தது.அதேசமயம், மத்திய அரசு, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், ஆண்டுக்கு சராசரியாக, 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி காண இலக்கு நிர்ணயித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.4 சதவீதமாக குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய காலாண்டில் (ஜன.,–மார்ச்), 4.8 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 5.4 சதவீதமாகவும் உயர்ந்து காணப்பட்டது.
எனினும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், பொருளாதார வளர்ச்சி நிச்சயம் சிறப்பான அளவில் இருக்கும். இதனை எடுத்துக்காட்டும் வகையில், அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 13.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,720 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.மேலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும், எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறையும் சூழல் உருவாகியுள்ளது.
அதாவது, நிதியமைச்சர், நடப்பு நிதிஆண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 7,000 கோடி டாலராக இருக்கும் என, தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அரசு, மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 6,000 கோடி டாலராக சரிவடையும் என, ர்பார்க்கப்படுகிறது.இது போன்ற காரணங்களால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்தை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு மான்டேக் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)