மாற்றமின்றி முடிந்தது தங்கம்-வெள்ளி விலைமாற்றமின்றி முடிந்தது தங்கம்-வெள்ளி விலை ... வேளாண் பொருட்களுக்கு7 சதவீத வட்டியில் கடன் வேளாண் பொருட்களுக்கு7 சதவீத வட்டியில் கடன் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
40 வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.1.28 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2013
00:15

புதுடில்லி:சென்ற செப்டம்பர் இறுதி நிலவரப்படி, பொதுத் துறையை சேர்ந்த 40 வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 1,28,533 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2012–13ம் நிதியாண்டு, மார்ச் இறுதி நிலவரப்படி, 93,109 கோடி ரூபாயாக இருந்தது.ஆக,நடப்பு நிதியாண்டின், ஏப்.,–செப்.,வரையிலான முதல் அரையாண்டில், 40 பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 38 சதவீதம் அதிகரித்து, 35,424 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இதே காலத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க், ஐ.டீ.பீ.ஐ. பேங்க், யூனியன் பேங்க் ஆகியவற்றின் நிகர வசூலாகாத கடன், 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், 14 பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத நிகர கடன், 50 சதவீதத்திற்கும் அதிகமாகஉயர்ந்துள்ளது. இருந்த போதிலும், 10 வங்கிகளின் வசூலாகாத நிகர கடன், சென்ற நிதியாண்டை விட, 2.2 சதவீதம் சரிவடைந்து, 70 சதவீதத்தில் இருந்து, 67.8 சதவீதமாக குறைந்துள்ளது.
7 வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 3.5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நடப்பு நிதியாண்டிற்குள், வங்கித் துறையின் வசூலாகாத கடன், 1.50 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, என்.பி.ஏ. சோர்ஸ் டாட் காம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, செப்டம்பர் 30 முதல், நடப்பு 2013ம் ஆண்டு, செப்டம்பர் 30 வரையிலான காலத்தில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 2.4 மடங்கு உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)