பதிவு செய்த நாள்
16 நவ2013
00:15
புதுடில்லி:சென்ற செப்டம்பர் இறுதி நிலவரப்படி, பொதுத் துறையை சேர்ந்த 40 வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 1,28,533 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2012–13ம் நிதியாண்டு, மார்ச் இறுதி நிலவரப்படி, 93,109 கோடி ரூபாயாக இருந்தது.ஆக,நடப்பு நிதியாண்டின், ஏப்.,–செப்.,வரையிலான முதல் அரையாண்டில், 40 பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், 38 சதவீதம் அதிகரித்து, 35,424 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இதே காலத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க், ஐ.டீ.பீ.ஐ. பேங்க், யூனியன் பேங்க் ஆகியவற்றின் நிகர வசூலாகாத கடன், 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், 14 பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத நிகர கடன், 50 சதவீதத்திற்கும் அதிகமாகஉயர்ந்துள்ளது. இருந்த போதிலும், 10 வங்கிகளின் வசூலாகாத நிகர கடன், சென்ற நிதியாண்டை விட, 2.2 சதவீதம் சரிவடைந்து, 70 சதவீதத்தில் இருந்து, 67.8 சதவீதமாக குறைந்துள்ளது.
7 வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 3.5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நடப்பு நிதியாண்டிற்குள், வங்கித் துறையின் வசூலாகாத கடன், 1.50 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, என்.பி.ஏ. சோர்ஸ் டாட் காம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு, செப்டம்பர் 30 முதல், நடப்பு 2013ம் ஆண்டு, செப்டம்பர் 30 வரையிலான காலத்தில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 2.4 மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|