பதிவு செய்த நாள்
16 நவ2013
00:20
புதுடில்லி:சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, நான்கு மடங்கு வளர்ச்சி கண்டு, 1.94 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 51 ஆயிரம் டன்னாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 280.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, இந்திய சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பின் (எஸ்.ஓ.பி.ஏ.,) செய்தி தொடர்பாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.மதிப்பீட்டு மாதத்தில், ஜப்பான் நாடு மிகவும் அதிகபட்சமாக, 1.04 லட்சம் டன் சோயா புண்ணாக்கை, நம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொண்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ஈரான், 33,035 டன் சோயா புண்ணாக்கை இறக்குமதி செய்து கொண்டுள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10.71 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 8.88 லட்சம் டன்னாக இருந்தது.சென்ற 2012–13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,–செப்.,), நம் நாடு, 34.73 லட்சம் டன் சோயா புண்ணாக்கை ஏற்றுமதி செய்துள்ளது என, ராஜேஷ் மேலும் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|