வேளாண் பொருட்களுக்கு7 சதவீத வட்டியில் கடன்வேளாண் பொருட்களுக்கு7 சதவீத வட்டியில் கடன் ... பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் - சிதம்பரம் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் - சிதம்பரம் ...
ஆயுள் காப்பீட்டு முதலாண்டு பிரிமியம் வசூல் 'ஜோர்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2013
00:22

மும்பை:சென்ற செப்டம்பருடன் முடிந்த, முதல் அரையாண்டில், ஆயுள் காப்பீட்டு துறை நிறுவனங்களின்,முதலாண்டு பிரிமியம் வசூல், 6.6 சதவீதம் அதிகரித்து, 59,057 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காணப்படும் வளர்ச்சியாகும்.

சென்ற நிதியாண்டின், இதே காலத்தில்,ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வசூல், 46,963 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், முதலாண்டு பிரிமியம், 7.25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37,906 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அடுத்த இடத்தில் உள்ள, தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதலாண்டு பிரிமியம், 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12,151 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பரில், யூனிட் சார்ந்த காப்பீட்டு திட்டங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்துடன், காப்பீட்டு
முகவர்களின் தரகு கட்டணம் குறைப்பு, முதிர்வுக்கான காலவரை நீட்டிப்பு போன்றவற்றால், காப்பீட்டு துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், பாரம்பரிய காப்பீடுகளை, புதிய வடிவமைப்புடன் வெளியிடுவதற்கான விதிமுறைகளை வெளியிட்டது.இதனை, பல காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இதனால், முகவர்கள் மற்றும் வங்கிகள், அதிக அளவில், ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வினியோகம் செய்யத் துவங்கியுள்ளன. இத்தகைய போக்கால், ஆயுள் காப்பீட்டு துறை, மீண்டும் எழுச்சி காணத் துவங்கியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)