பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் - சிதம்பரம்பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும் - சிதம்பரம் ... தங்கம் பயன்பாடு 50 சதவீதம் குறைந்தது:மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் தங்கம் பயன்பாடு 50 சதவீதம் குறைந்தது:மத்திய அரசின் கட்டுப்பாடுகளால் ...
காபி உற்பத்தி 3.47 லட்சம் டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2013
00:56



நடப்பு 2013-14ம் நிதிஆண்டில், நாட்டின் காபி உற்பத்தி, 9 சதவீதம் அதிகரித்து, 3.47 லட்சம் டன்னாக உயரும் என, கர்நாடகா தோட்டப் பயிர் கூட்டமைப்பு (கே.பி.ஏ.,) மதிப்பீடு செய்துள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:சென்ற 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் காபி உற்பத்தி, 3.18 லட்சம் டன்னாக இருந்தது. காபி
உற்பத்தியாளர்கள், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையிலும், நடப்பு நிதியாண்டில், கூடுதலாக, 29 ஆயிரம் டன் காபி உற்பத்தியாகும் என, தெரிகிறது.

நாட்டின் மொத்த காபி உற்பத்தியில், 75 சதவீத பங்களிப்பை, கே.பி.ஏ., வழங்கி வருகிறது.நடப்பு நிதியாண்டில், அரபிகா வகை காபி உற்பத்தி, 12.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.11 லட்சம் டன்னாக உயரும். அதே போன்று, ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 7.5 சதவீதம் அதிகரித்து, 2.36 லட்சம்டன்னாக உயரும் என, காபி வாரியம் மதிப்பிட்டுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கான காபி உற்பத்தி, 850 கிலோவில் இருந்து, 748 கிலோவாக குறைந்துள்ளது. இருந்த போதிலும், நாட்டின் காபி உற்பத்தி, அதிகரித்து வருகிறது. இந்தியாவை விட, வியட்னாம், 2.6 மடங்கும், பிரேசில், 1.5 மடங்கும் காபி உற்பத்தி செய்கின்றன.இந்தியாவில், காபி பயிர்கள், பூச்சித்தாக்குதலை சமாளித்து,

அதிகபட்ச உற்பத்தியை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை, கே.பி.ஏ., எடுத்து வருகிறது. இதற்காக, பிரேசில் காபி துறையில் நிபுணத்துவம் பெற்ற இரண்டு பேருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள், காபி உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையானஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், இந்திய விவசாயிகளுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)