வெளிமாநில வரத்தால் புளி விலை குறைவுவெளிமாநில வரத்தால் புளி விலை குறைவு ... அன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்பு அன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்பு ...
உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாட்டில் தளர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2013
15:40

புதுடில்லி :சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை, மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இது குறித்து, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்நாட்டில், சர்க்கரை உற்பத்தி தேவையை விட, அதிகமாக உள்ளது. இைத கருத்தில் கொண்டு, ஒரு தனிநபருக்கான ஏற்றுமதி வரம்பு, 25 ஆயிரம் டன்னிலிருந்து, 50 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு ஏற்றுமதியாளர், அதிகபட்சமாக, 50 ஆயிரம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதே சமயம, உள்நாட்டில் சர்க்கரைக்கான தேவை, 2.30 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சர்க்கரைக்கான ஏற்றுமதி வரம்பை உயர்த்த வேண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது.இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, சர்க்கரைக்கான ஏற்றுமதி வரம்பு, தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

சென்ற 2012 - 13ம் ஆண்டில் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்., - செப்.,), நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி, 3.25 லட்சம் டன்னாக இருந்தது. இது, நடப்பு 2013 - 14ம் பருவத்தில், 3 - 4 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அபினாஸ் வர்மா கூறுகையில், ' அரசின் இந்த முடிவு வரவேற்க கூடியது. என்றாலும், ஏற்றுமதிக்கான பதிவு முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும். அப்போது தான், சர்க்கரை ஏற்றுமதி, சிறப்பான அளவில் அதிகரிக்கும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)