உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாட்டில் தளர்வுஉள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாட்டில் ... ... அன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்பு அன்­னிய செலா­வணி கையி­ருப்பு:28,211 கோடி டால­ராக அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தாவர எண்ணெய் இறக்­கு­மதி 1.07 கோடி டன்­னாக உயர்வு:உள்­நாட்டில் பயன்­பாடு அதி­க­ரிப்பால்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2013
00:05

புது­டில்லி:வரலா­ற்றில் முதன் முறை­யாக, நாட்டின் தாவர எண்ணெய் இறக்­கு­மதி, சென்ற 2012–13ம் சந்­தைப்­ப­டுத்தும் பரு­வத்தில் (நவ.,–அக்.,), 1.07 கோடி டன்னாக உயர்ந்­துள்­ளது என, இந்­திய எண்ணெய் உற்­பத்­தி­யாளர்கள் சங்கம் ெவளியிட்டு உள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.தேவை:உள்­நாட்டில், தாவர எண்ணெய் உற்­பத்தி குறைந்­து உள்ள அதே நேரத்தில், அதன் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கி­றது. தேவையை பூர்த்தி செய்யும் அள­விற்கு, உற்­பத்தி இல்­லா­ததால், நம்­நாடு, 50 சத­வீத சமையல் எண்ணெய் வகை­களை ெவளிநா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்து கொள்­கி­றது.
கடந்த 2011–12ம் பரு­வத்தில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்­கு­மதி, 1.02 கோடி டன்னாக இருந்­தது. ஆக, சென்ற பரு­வத்தில், இதன் இறக்­கு­மதி, 4.77 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.கடந்த பரு­வத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்­கு­மதியில், சமையல் எண்ணெய் வகை­களின் இறக்­கு­மதி, 1.04 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த பரு­வத்தில், 99.80 லட்சம் டன்­னாக இருந்­தது.
கணக்­கீட்டு காலத்தில், சமையல் சாராத இதர எண்ணெய் இறக்­கு­மதி, 2.11 லட்சம் டன்­னி­லி­ருந்து, 2.94 லட்சம் டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது.இந்­தோ­னே­சியா:நம்­நாடு, மலே­சியா மற்றும் இந்­தோ­னே­சியா ஆகிய நாடு­களி­லி­ருந்து, பாமா­யிலை அதிக­அளவில் இறக்­கு­மதி செய்து கொள்­கி­றது.அர்­ஜென்­டினா, பிரேசில் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து, சோயா எண்ணெய் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது. மலே­சியா மற்றும் இந்­தோ­னே­சியா ஆகிய நாடு­களில், பாமாயில் உற்­பத்தி அதி­க­ரித்­த­தை­ அடுத்து, இந்­நாடுகள், கையிருப்பை குறைக்கும் வகையில், ஏற்­று­மதி செய்­யப்­படும், பாமாயில் மீதான வரியை வெகு­வாக குறைத்­தன. இதனால், சர்­வ­தேச சந்­தையில் பாமாயில் விலை குறைந்­தது.
இதை சாத­க­மாக பயன்­படுத்தி, இந்­திய வர்த்­த­கர்கள், மேற்­கண்ட நாடு­க­ளி­லி­ருந்து, அதிக அளவில் பாமா­யிலை இறக்கு­மதி செய்­தனர்.இந்­நி­லையில், உள்­நாட்டில், தனி­நபர் எண்ணெய் பயன்­பாடு, 3 சத­வீதம் உயர்ந்­துள்­ள­துடன், கணக்­கீட்டு காலத்தில், மக்கள் தொகையும், 1.76 சத­வீதம் அதிக­ரித்­துள்­ளது. இதுவும், எண்ணெய் இறக்­கு­மதி உயர்­விற்கு முக்­கிய காரணம் என, இச்­சங்­கத்தின் புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
நடப்பு நிதி­யாண்டின், ஏப்ரல் முதல் அக்­டோபர் வரை­யி­லான, ஏழு மாத காலத்தில், சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பாமாயில் இறக்­கு­மதி, 16 லட்சம் டன்­னிற்கும் அதி­க­மாக உயர்ந்­துள்­ளது. எண்ணெய் வித்­துக்கள்:அதே­ச­மயம், கடந்த நிதி­ஆண்டின் இதே காலத்தில், இதன் இறக்­கு­மதி, 7.50 லட்சம் டன் என்ற அளவில், மிகவும் குறை­வாக இருந்­தது.
உள்­நாட்டில், எண்ணெய் வித்­துக்கள் உற்­பத்தி குறைந்து, சமையல் எண்­ணெய்க்­கான தேவை அதி­க­ரித்­த­தை­ய­டுத்து, கடந்த ஆறு ஆண்­டு­களில், சமையல் எண்ணெய் இறக்­கு­மதி, இரண்டு மடங்­கிற்கும் மேல் அதி­க­ரித்­துள்­ளது.மேலும், இதே காலத்தில் சுத்தி­க­ரிக்­கப்­பட்ட பாமாயில் இறக்­கு­மதி, 3 மடங்கு உயர்ந்­து உள்­ளது.
கணக்­கீட்டு காலத்தில், சுத்திக­ரிக்­கப்­பட்ட எண்ணெய் இறக்­கு­மதி, 41 சத­வீதம் அதி­க­ரித்து, 15.80 லட்சம் டன்­னி­லி­ருந்து, 22.20 லட்சம் டன்­னாக உயர்ந்துள்­ளது.அதே­ச­மயம், கணக்­கீட்டு காலத்தில், சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் இறக்­கு­மதி, 3 சத­வீதம் குறைந்து, 84 லட்சம் டன்­னி­ல் இருந்து, 82 லட்சம் டன்­னாக சரி­வ­டைந்­துள்­ளது.சென்ற அக்­டோபர் மாதத்தில் மட்டும், தாவர எண்ணெய் இறக்கு­மதி, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 1.36 சதவீதம் குறைந்து, 10.37 லட்சம் டன்னிலிருந்து, 10.22 லட்சம் டன்­னாக குறைந்­துள்­ளது என, இந்­திய எண்ணெய் உற்­பத்­தி­யா­ளர்கள் சங்கம் மேலும் தெரி­வித்­துள்­ளது.
உற்பத்தி:நடப்பு 2013–14ம் வேளாண் பரு­வத்தில், நாட்டின் பல மாநிலங்­களில், பரு­வ­மழை பொழிவு நன்கு உள்­ள­தை­ய­டுத்து, எண்ணெய் வித்­துக்கள் சாகு­படி பரப்­ப­ளவு சிறப்­பான அளவில் அதி­க­ரித்­துள்­ளது. இதனால், சமையல் எண்ணெய் வகை­களின் உற்­பத்தி அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.அவ்­வாறு, சமையல் எண்ணெய் வகை­களின் உற்­பத்தி அதி­க­ரிக்கும் நிலையில், நடப்பு சந்­தைப்­ப­டுத்தும் பரு­வத்தில், தாவர எண்ணெய் இறக்­கு­மதி கணி­ச­மாக குறைய வாய்ப்­புஉள்­ளது என, இத்­து­றையைச் சேர்ந்த ஆய்­வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)