பதிவு செய்த நாள்
18 நவ2013
00:37
பெங்களூரு: குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில், புதிதாக இரண்டு, ‘டெர்மினல்’களை, மத்திய கப்பல் துறை அமைச்சர், ஜி.கே.வாசன் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.இதற்கான விழா, பெங்களூருவில் நடந்தது. நிகழ்ச்சியில், அமைச்சர் வாசன் பேசியதாவது:கண்ட்லா துறைமுகம் துவக்கப்பட்ட நாளிலிருந்து, குஜராத் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும், அது, உறுதுணையாக உள்ளது. அங்கு புதிதாக, 216 கோடி ரூபாய் செலவில், புதிதாக இரண்டு டெர்மினல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் துறைமுகங்களை மேம்படுத்த, கடந்த ஐந்தாண்டுகளில், மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2012 – 13ம் ஆண்டில் மட்டும், 32 திட்டங்களுக்காக, 6,700 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. நடப்பாண்டில், 30 திட்டங்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளோம்.கண்ட்லா துறைமுகம், கடந்த ஆண்டில், 94 மில்லியன் டன் சரக்கு களை கையாண்டுள்ளது. இந்த ஆண்டில், 100 மில்லியனை தாண்ட வேண்டும் என, இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.
பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வாசன், ‘‘மேற்கு வங்கத்தின், சாகர் தீவுகள் மற்றும் ஆந்திராவின் துகராஜபட்டினத்தில், இரண்டு புதிய துறைமுகங்களை அமைத்து வருகிறோம்,’’ என்றார்.இந்த நிகழ்ச்சியில், மத்திய கப்பல் துறை செயலர், விஸ்வபதி திரிபாதி, துறைமுகங்கள் துறை இணை செயலர், என்.முருகானந்தம், கப்பல் துறை இணை செயலர், ஜஹாரி, கண்ட்லா துறைமுகத் தலைவர், பி.டி.வகேலா மற்றும் பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|