சேவை வரியை வட்­டி­யின்றி செலுத்த அரசு சலுகைசேவை வரியை வட்­டி­யின்றி செலுத்த அரசு சலுகை ... ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.47 ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.62.47 ...
கண்ட்லா துறை­மு­கத்தில் புதி­தாக இரண்டு டெர்­மி­னல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2013
00:37

பெங்­க­ளூரு: குஜ­ராத்தின் கண்ட்லா துறை­முகத்தில், புதி­தாக இரண்டு, ‘டெர்­மினல்’­களை, மத்­திய கப்பல் துறை அமைச்சர், ஜி.கே.வாசன் நாட்­டிற்கு அர்ப்­பணித்தார்.இதற்­கான விழா, பெங்­க­ளூ­ருவில் நடந்­தது. நிகழ்ச்­சியில், அமைச்சர் வாசன் பேசி­ய­தா­வது:கண்ட்லா துறை­முகம் துவக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து, குஜராத் மாநிலம் மட்­டு­மின்றி, நாட்டின் வளர்ச்­சிக்கும், அது, உறு­து­ணை­யாக உள்­ளது. அங்கு புதி­தாக, 216 கோடி ரூபாய் செலவில், புதி­தாக இரண்டு டெர்­மி­னல்கள் நாட்­டுக்கு அர்ப்­ப­ணிக்­கப்­பட்­டுள்­ளன.
நாட்டின் துறை­மு­கங்­களை மேம்­ப­டுத்த, கடந்த ஐந்­தாண்­டு­களில், மத்­திய அரசு பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. 2012 – 13ம் ஆண்டில் மட்டும், 32 திட்­டங்­க­ளுக்­காக, 6,700 கோடி ரூபாயை மத்­திய அரசு வழங்­கி­யுள்­ளது. நடப்­பாண்டில், 30 திட்­டங்­க­ளுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்ய உள்ளோம்.கண்ட்லா துறை­முகம், கடந்த ஆண்டில், 94 மில்­லியன் டன் சரக்­கு­ களை கையாண்­டுள்­ளது. இந்த ஆண்டில், 100 மில்­லி­யனை தாண்ட வேண்டும் என, இலக்கு நிர்­ண­யித்­து உள்ளோம்.இவ்­வாறு, அவர் பேசினார்.
பின், நிரு­பர்­க­ளிடம் பேசிய அமைச்சர் வாசன், ‘‘மேற்கு வங்­கத்தின், சாகர் தீவுகள் மற்றும் ஆந்­தி­ராவின் துக­ரா­ஜ­பட்­டி­னத்தில், இரண்டு புதிய துறை­மு­கங்­களை அமைத்து வரு­கிறோம்,’’ என்றார்.இந்த நிகழ்ச்­சியில், மத்­திய கப்பல் துறை செயலர், விஸ்­வ­பதி திரி­பாதி, துறை­மு­கங்கள் துறை இணை செயலர், என்.முரு­கா­னந்தம், கப்பல் துறை இணை செயலர், ஜஹாரி, கண்ட்லா துறை­முகத் தலைவர், பி.டி.வகேலா மற்றும் பலர் பங்­கேற்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)