பதிவு செய்த நாள்
18 நவ2013
14:01
ஒட்டன்சத்திரம்: கேரளாவில், "பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு, விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள், நேற்று பாதி விலைக்கு விற்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு, விற்பனைக்கு வரும் காய்கறிகளில், 70 சதவீதத்தை, கேரள வியாபாரிகளே வாங்கிச் செல்கின்றனர். கேரளா, இடுக்கி மாவட்டத்தின் பல இடங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதை கண்டித்து, இன்று, அம்மாநிலம் முழுவதும், "பந்த்' அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், கமிஷன் கடைகாரர்கள் கூறியபடி, பல விவசாயிகள் காய்கறிகளை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதை அறியாத சில விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்திருந்தனர். அவை பாதி விலைக்கு விற்கப்பட்டன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|