பதிவு செய்த நாள்
18 நவ2013
14:03
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, 15 ஆயிரம் ஏக்கரில் ஆரஞ்சு பயிரிடப்பட்டு உள்ளது. வழக்கமாக, செப்டம்பரில் துவங்கும், ஆரஞ்சு பழ சீசன், ஜனவரியில் முடிவடையும். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், ஆரஞ்சு காய்களின் பருமன் குறைந்துள்ளதோடு, பலவிதமான நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதலாலும், மகசூல் பாதித்துள்ளது. தற்போது, சீசன் துவங்கியுள்ள நிலையில், பறிக்கப்படும் ஆரஞ்சு காய்கள் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கேரளா பகுதிகளுக்கு, கிலோ, 20 முதல் 22 ரூபாய் வரையிலான விலையில் அனுப்பப்படுகின்றன. கடந்தாண்டு இதே நேரத்தில், கிலோவுக்கு, 30 முதல் 35 வரை ரூபாய் வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு விலை குறைந்துள்ளதால், செலவழித்த தொகை கிடைக்குமா என்ற ஏக்கம் மற்றும் கவலையில், விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|