பதிவு செய்த நாள்
19 நவ2013
00:35
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 1.13 சதவீதம் உயர்ந்தது.சென்ற வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வியாழனன்று, ரூபாய் மதிப்பு, 63.12ஆக இருந்தது. இந்த மதிப்பு, நடப்பு வாரத்தின் துவக்க நாளான நேற்று, மேலும், 70 காசுகள் உயர்ந்து, 62.42ஆக அதிகரித்தது.சென்ற வெள்ளியன்று, தற்போதுள்ள, அமெரிக்க பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும் என, அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜேனட் யெல்லன் தெரிவித்தார்.இதனால், ஊக்கமடைந்த முதலீட்டாளர்கள், அதிக அளவில் இந்திய பங்குச் சந்தைகளிலும், அன்னியச் செலாவணி சந்தையிலும் முதலீடு செய்தனர்.இதன் காரணமாக, டாலருக்கான தேவை குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த ஜனவரி முதல், இதுவரையிலுமாக ரூபாய் மதிப்பு, 12.06 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|