அக்டோபரில் 50 லட்சம் பேர்உள்நாட்டு விமான பயணம்அக்டோபரில் 50 லட்சம் பேர்உள்நாட்டு விமான பயணம் ... பயணிகள் வாயிலான ரயில்வே வருவாய் ரூ.21,271 கோடி பயணிகள் வாயிலான ரயில்வே வருவாய் ரூ.21,271 கோடி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தனிப்­பட்ட கடன் பத்­திர ஒதுக்­கீட்டில் ரூ.1.22 லட்சம் கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2013
00:23

புது­டில்லி:நடப்பு 2013–14ம் நிதி­யாண்டின் ஏப்ரல் முதல் செப்­டம்பர் வரை­யி­லான
முதல் ஆறு மாத காலத்தில், இந்­தியநிறு­வ­னங்கள், தனிப்­பட்ட கடன் பத்­திரஒதுக்­கீடு வாயி­லாக திரட்­டிய தொகை,1,22,091 கோடி ரூபா­யாக உள்­ளது.
இது, இதற்கு முந்­தைய நிதி­ஆண்டின் இதே காலத்தில், 1,62,352 கோடி ரூபா­யாக இருந்­தது.ஆக, மதிப்­பீட்டு காலத்தில், தனிப்­பட்ட கடன்­பத்­திர ஒதுக்­கீடு வாயி­லாக,
இந்­திய நிறு­வ­னங்கள் திரட்­டிய தொகை, 25 சத­வீதம் சரி­வ­டைந்­துள்­ளது என, பிரைம் டேட்­டாபேஸ் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
மூலதனம்:பல்­வேறு நிறு­வ­னங்கள், அவற்றின் மூல­தனத் தேவைக்­காக, தனிப்­பட்ட முறையில் நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, தேவை­யான நிதியை திரட்டிக் கொள்­கின்­றன.இந்த வகையில், கணக்­கீட்டு காலத்தில், நிதி நிறு­வ­னங்கள் மற்றும் வங்­கிகள் மிகவும் குறைந்­த­பட்­ச­மாக, 58,744 கோடி ரூபாயை திரட்டி கொண்­டுள்­ளன.
இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலத்­துடன் ஒப்­பி­டு­கையில், 31 சத­வீதம் சரி­வாகும்.
மதிப்­பீட்டு காலத்தில், தனியார் துறை நிறு­வ­னங்கள், தனிப்­பட்ட கடன் பத்­திர ஒதுக்­கீடு மூலம் திரட்டி கொண்ட தொகை, 14 சத­வீதம் சரி­வ­டைந்து, 51,271 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.
இதே போன்று, மாநில அர­சு­களின்நிதி நிறு­வ­னங்கள் திரட்­டிய தொகை, 39 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 1,251 கோடி­யா­கவும், பொதுத் துறை நிறு­வ­னங்கள் திரட்­டிய தொகை, 12
சத­வீதம் குறைந்து, 9,692 கோடி ரூபா­யா­கவும் சரி­வ­டைந்­துள்­ளன.குறிப்­பாக, மாநில அரசு நிறு­வ­னங்கள் திரட்­டிய தொகை, 75 சத­வீதம் வீழ்ச்சி கண்டு, 1,133 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.
மதிப்­பீட்டு காலத்தில், தனிப்­பட்ட கடன் பத்­திர ஒதுக்­கீடு மூலம் அதி­க­ளவு நிதி திரட்டி கொண்­டதில் நிதி சேவை நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு, 69 சத­வீதம் அல்­லது 84,879 கோடி ரூபா­யாக உள்­ளது. இதை­ய­டுத்து, மின் துறை நிறு­வ­னங்கள், 10 சத­வீத பங்­க­ளிப்­புடன் (12,025 கோடி ரூபாய்) இரண்டாம் இடத்தில் உள்­ளன.பவர் பைனான்ஸ்
குறிப்­பாக, பவர் பைனான்ஸ் கார்ப்­ரேஷன், மிகவும் அதி­க­பட்­ச­மாக, 12,158 கோடி ரூபாயை திரட்டி கொண்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (9,822 கோடி), எச்.டீ.எப்.சி., (9,610 கோடி), ரூரல் எலக்ட்­ரி­பி­கேஷன் கார்ப்., (8,150 கோடி), மற்றும் பவர் கிரிட் (7,092 கோடி ரூபாய்) ஆகிய நிறு­வ­னங்கள் உள்­ளன.சென்ற 2012–13ம் நிதி­யாண்டில்,இவ்­வகை ஒதுக்­கீ­டு­களின் மூலம், இந்­திய நிறு­வ­னங்கள் திரட்டிய தொகை, கடந்த 12 ஆண்­டு­களில் இல்­லாத அளவில், 3.5 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்து காணப்­பட்­டது என, பிரைம் டேட்­டாபேஸ் மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)