பதிவு செய்த நாள்
20 நவ2013
00:28

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனப் பங்குகளில் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன்
முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், நுகர்பொருட்கள், மின்சாரம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 40.08 புள்ளிகள் அதிகரித்து, 20,890.82 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,934.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,828.69 புள்ளிகள் வரையிலும் சென்றது.சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஜிந்தால் ஸ்டீல், ஹிண்டால்கோ, மாருதி உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், கோல் இந்தியா, விப்ரோ உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவ டைந்தும், டாட்டா பவர் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், நிப்டி 14.35 புள்ளிகள் உயர்ந்து, 6,203.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக,6,212.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,180.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|