பயணிகள் வாயிலான ரயில்வே வருவாய் ரூ.21,271 கோடிபயணிகள் வாயிலான ரயில்வே வருவாய் ரூ.21,271 கோடி ... ஒரே வாரத்தில் மிளகு கிலோவுக்கு ரூ.140 உயர்வு ஒரே வாரத்தில் மிளகு கிலோவுக்கு ரூ.140 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 40 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2013
00:28

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனப் பங்குகளில் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன்
முடிவடைந்தன.

ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், நுகர்பொருட்கள், மின்சாரம், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 40.08 புள்ளிகள் அதிகரித்து, 20,890.82 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,934.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,828.69 புள்ளிகள் வரையிலும் சென்றது.சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஜிந்தால் ஸ்டீல், ஹிண்டால்கோ, மாருதி உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், கோல் இந்தியா, விப்ரோ உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவ டைந்தும், டாட்டா பவர் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், நிப்டி 14.35 புள்ளிகள் உயர்ந்து, 6,203.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக,6,212.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,180.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)