பதிவு செய்த நாள்
21 நவ2013
00:17
நாமக்கல்:மக்களிடையே முட்டை நுகர்வு குறைந்து வருவதால், தேசிய அளவில், எட்டு மண்டலங்களில் மட்டும், அதன் விலை, 5 – 15 காசுகள் வரை, குறைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் முட்டை விலை குறைக்கப்படவில்லை.
தேசிய அளவில் உள்ள, 24 மண்டலங்கள் மற்றும் விற்பனை மையங்கள் மூலம், தினசரிநுகர்வு, ஏற்றுமதி ஆகியவற்றை கணக்கில்கொண்டு, சம்பந்தப்பட்ட மண்டல கமிட்டிமூலம், முட்டைவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது.வடகிழக்கு பருவமழை, குளிர்கால துவக்கம் போன்றவற்றால், மக்களிடையே முட்டையின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதனால், முட்டைவிலை, 425 காசுகள்வரை, கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில்,முட்டைவிலை உயர்வு காரணமாக, மக்களிடையேஅதன் பயன்பாடு குறைந்துள்ளது.இதையடுத்து, தேசிய அளவில், முட்டைவிலை குறைக்கப்பட்டுள் ளது.பர்வாலாவில் முட்டை விலை, 395லிருந்து,390 காசுகளாக குறைந்துள்ளது. அது போன்று, போபாலில், 405 காசுகளிலிருந்து, 390 காசுகளாகவும், இண்டூர், 405லிருந்து, 390, கோல்கட்டா, 415லிருந்து410,லூதியானா, 399லிருந்து, 394, பஞ்சாப், 399லிருந்து394, ராய்பூர், 392 லிருந்து,385 காசுகளாகவும்குறைந்துள்ளது. ஆனால்,நாமக்கல் மண்டலத்தில், கடந்த எட்டு நாட்களாக, முட்டை விலை, 396 காசுகளாகவே நீடிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|