பதிவு செய்த நாள்
22 நவ2013
00:56
புதுடில்லி: நடப்பு 2013–14ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 2.69 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வசூலை விட, 5.3 சதவீதம் அதிகம் என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு காலத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த வசூலில், உற்பத்தி வரி, 89,600 கோடி ரூபாயாகவும், சுங்க வரி, 98 ஆயிரம் கோடி ரூபாயாகவும், சேவை வரி, 81,500 கோடி ரூபாயாகவும் உள்ளன.நடப்பாண்டு அக்டோபரில், மறைமுக வரி வசூல், கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 7.5 சதவீதம் உயர்ந்து, 42,520 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் வாயிலாக, 5.65 லட்சம்கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், மறைமுக வரி வசூல் மூலம், 4.73 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|