கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,120 கோடி கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.16,120 கோடி ... வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.66,387 கோடியாக வளர்ச்சி வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ரூ.66,387 கோடியாக வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கேற்பு ஆவணங்கள் மூலம்ரூ.1.84 லட்சம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2013
01:16

புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், இந்திய நிறுவனப் பங்குகளில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான அன்னிய முதலீடு, 1.84 லட்சம் கோடி ரூபாயை (2,900 கோடி டாலர்) எட்டியுள்ளது. பங்குச்சந்தை:இது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும் என, பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான 'செபி' வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்திய பங்குச் சந்தைகளில், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட் முதலீடு, 1.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2011ம் ஆண்டு மே மாதத்தில் தான், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில், அதிகபட்ச அளவாக, 2,11,199 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள அதிக சொத்து கொண்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், பதிவு செய்யப்பட்ட அன்னிய நிதி நிறுவனங்கள் வெளியிடும், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் முதலீடு மேற்கொள்கின்றனர். இதனால், நேரம் மற்றும் செலவு ஆகியவை மிச்சமாகின்றன.சென்ற அக்டோபர் மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, கடன்பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 1.11 லட்ம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. அன்னிய நிறுவனங்கள்: இருப்பினும், இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, அக்டோபர் மாதத்தில், பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, 13.06 சதவீதத்திலிருந்து, 12.98 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த அக்டோபரில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்கு களில் மேற்கொண்ட முதலீடு, 15,700 கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம், 13,500 கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையிலிருந்து விலக்கி கொண்டுள்ளன என, 'செபி' மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)