ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வு ... டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ்50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ்50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ...
சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2013
00:25

இந்தியாவில் உற்பத்தியாகும் சோயா புண்ணாக்கின் தரம் குறைவாகவும், அதே சமயம் விலை உயர்ந்தும் காணப்படுவதால், அதன் ஏற்றுமதி பாதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்தது.
விவசாயிகள்:சென்ற 2012ம் ஆண்டு, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில், நாட்டின் சோயாபுண்ணாக்கு ஏறறுமதி, 8.72 லட்சம் டன்னாக இருந்தது. இது, நடப்பு ஆண்டின், இதே காலத்தில், 15 சதவீதம் அதிகரித்து, 10.56 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது.எனினும், நடப்பு நிதியாண்டில் (2013–14), எஞ்சிய ஐந்து மாதங்களில் (நவ.,–மார்ச்), சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தாமதமான மழை பொழிவால், சோயாவில் ஈரப்பதம் அதிகரித்து, அதன் புரதச் சத்து குறைந்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில் விவசாயிகள், சோயா விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், அளவிற்கதிகமாக அதனை, இருப்பு வைத்துள்ளனர்.
இதனால், நடப்பு நிதியாண்டில், அரவைக்கான சோயா வரத்து, 50 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, வியட்நாம் நாட்டிற்கு சாதகமாக அமையும். இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறைந்தால், ஜப்பான், ஈரான், இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகள், வியட்நாம் போன்ற இதர நாடுகளில் இருந்து, அதனை இறக்குமதி செய்து கொள்ள வாய்ப்புள்ளது.இத்துடன், இந்திய சோயா புண்ணாக்கு விலை உயர்வும், ஏற்றுமதியை பாதிக்கக் கூடியதாக உள்ளது.
சராசரி விலை :இதர நாடுகளின் விலையை விட, இந்திய சோயா புண்ணாக்கின், சராசரி துறைமுக விலை, டன்னுக்கு, 20 30 டாலர் அதிகமாக உள்ளது.
சென்ற செப்டம்பரில், இந்தியாவின், 1 டன் சோயா புண்ணாக்கின் சராசரி துறைமுக விலை, 510 டாலராக இருந்தது. இது, அக்டோபரில், 540 டாலராக உயர்ந்து, நடப்பு நவம்பர் மாதம், 555 டாலராக அதிகரித்துள்ளது.அதே சமயம், அமெரிக்கா, பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல் போன்ற நாடுகளில், இது, 530–535 டாலராக உள்ளது.இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களில், இந்தியாவின் 1 டன் சோயா புண்ணாக்கு விலை, 5.6 சதவீதம் உயர்ந்து, 33,010 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், 1 குவிண்டால் சோயா விலை, 14.1 சதவீதம் உயர்ந்து, 3,864 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக, வரும் டிசம்பர் வரையில், வர்த்தகர்கள், சோயா புண்ணாக்கை ஏற்றுமதி செய்ய முடியும்.அதற்கடுத்த மாதங்களுக்கு சப்ளை செய்வதற்கான வாய்ப்பு குறையத் துவங்கியுள்ளது."தரம் குறைந்த சோயா புண்ணாக்கு காரணமாக, எண்ணெய் உற்பத்தியாளர்களின் லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளது" என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (எஸ்.இ.ஏ.,) செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.
"நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,–அக்.,) ஒட்டுமொத்த எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி, கடந்த பருவத்தை விட, 10 லட்சம் டன் குறையும்" என, ஜி.ஜி.என் நிறுவனத்தின் பங்குதாரர், நீரவ் தேசாய் தெரிவித்தார்.
எண்ணெய் உற்பத்தி:"பல இறக்குமதியாளர்கள், இந்திய சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 'ஆர்டர்' களை ரத்து செய்துள்ளனர்" என, மும்பையை சேர்ந்த சோயா புண்ணாக்கு தரகர் ரமேஷ் கோடெச்சா கூறினார்."வழக்கமாக, இம்மாதத்தில், எண்ணெய் உற்பத்தியாளர்கள், முழு வீச்சில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பர்.
ஆனால், தற்போது 50 சதவீத உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது ", என, சோயா பதப்படுத்தல் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)