நடப்பு நிதியாண்டின் ஆறு மாதங்களில்வெளி சந்தையில் 11.5 லட்சம் டன் கோதுமை விற்பனை:இடபற்றாக்குறைநடப்பு நிதியாண்டின் ஆறு மாதங்களில்வெளி சந்தையில் 11.5 லட்சம் டன் கோதுமை ... ... ஐ.டி., துறை ஐ.டி., துறை ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும்ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும் ஐ.டி., துறை ஐ.டி., துறை ஏற்றுமதி 8,600 கோடி டாலராக உயரும்ஏற்றுமதி 8,600 கோடி டாலராக ... ...
மத்திய அரசின் பொது கடன்ரூ.45.80 லட்சம் கோடியாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2013
05:05

புதுடில்லி:நடப்பு 2013 – 14ம் நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், மத்திய அரசின் ஒட்டு மொத்த பொதுக்கடன் (பொது கணக்கில் உள்ள கடன் நீங்கலாக), 45,80,472 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,இது, இதற்கு முந்தைய முதல் காலாண்டில், 42,92,870 கோடி ரூபாயாக இருந்தது.ஆக, இரண்டாவது காலாண்டில், மத்திய அரசின் ஒட்டு மொத்த பொதுக்கடன், 6.7 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, முதல் காலாண்டில், 4.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த பொதுக்கடனில், உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 90.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, முதல் காலாண்டில், 90.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
பட்ஜெட் மதிப்பீட்டில், நடப்பு, 2013 – 14ம் நிதிஆண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதம் அல்லது 5,42,499 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5,20,925 கோடி ரூபாயாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.2 சதவீதம்) இருந்தது.நடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு, வெளிச் சந்தையிலிருந்து, மொத்த மற்றும் நிகர அளவில் முறையே, 5,79,009 கோடி மற்றும் 4,84,000 கோடி ரூபாய் கடன் திரட்ட வேண்டியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)