பதிவு செய்த நாள்
26 நவ2013
01:07
புதுடில்லி:"சிறப்பு பரிவர்த்தனை திட்டத்தின் கீழ், இதுவரை, 2,500 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது" என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்.ஆர். கான் தெரிவித்தார்.டில்லியில், நேஷனல் ஹவுசிங் பேங்க்ன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின்னர். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுத்து, டாலர் புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கியால், கடந்த செப்டம்பர் 4ம் தேதி, 'சிறப்பு பரிவர்த்தனை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், டாலரில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கான வட்டியில், வங்கிகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டது. மேலும், வங்கிகள், வெளிநாடுகளில் இருந்து டாலர் வழியில் பெறும் கடனுக்கும் வட்டிச் சலுகை வழங்கப்பட்டது.
இத்திட்டங்கள் வாயிலாக, 2,500 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி வரை, இந்த சிறப்பு திட்டம் அமலில் இருக்கும். எனினும், அதற்குள் வங்கிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின் கீழ், தொகையை பெற்றுக் கொளள், டிசம்பர் 31ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 30 சதவீதம் சரிவடைந்திருந்தது. செப்டம்பரில், சிறப்பு திட்டம் அமலான பிறகு, ரூபாய் மதிப்பு, 11 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|