பதிவு செய்த நாள்
26 நவ2013
01:09
நடப்பு, 2013– 14 ம் நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில், 2,875 நிறுவனங்களின் நிகரலாபம், 27 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த, 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்திய நிறுவனங்களின் செயல்பாடும், நிகர லாபமும் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டிருந்தன.
விற்பனை:அக்காலண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், எண்ணெய், வங்கி, வங்கி சாரத நிதி நிறுவனங்கள் தவிர்த்த, ஏனைய பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் நிகரலாபம் குறைந்துள்ளதாக ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், கணக்கீட்டுக் காலத்தில், நிறுவனங்களின் நிகர விற்பனை, 62.3 சதவீதம் வளர்ச்சி கண்டு 8.91 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த, 2009ம் ஆண்டின் மார்ச்மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 5.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், 2,875 நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகரலாபம், 48, 665 கோடி ரூபாயில் இருந்து, 48,351 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது, கடந்த, 2011ம் ஆண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 66,130 கோடி ரூபாயாக இருந்தது.இதுகுறித்து எடல்வைஸ் பைனான்சியல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நித்தின் ஜெயின் கூறியதாவது.ஒட்டு மொத்த பொருளாதார சுணக்க நிலை, பணவீக்கம் அதிகரிப்பு பணியாளர்களுக்கான செலவினம் உயர்வு அதிக வட்டிச் செலவினம், உள்ளிட்ட பல காரணங்களால், நிறுவனங்களின் நிகரலாப வரம்பு குறைந்துள்ளது.
உற்பத்தி திறன்:பல நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதுடன் புதிய சந்தைகளிலும் கால் பதித்துள்ளன. ஆனால், நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களுக்கு தேவை குறைந்து போனதால், இவற்றின் நிகர லாபம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தற்போது, நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதுடன், பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதால், இனி வரும் காலாண்டுகளின், இந்திய நிறுவனங்களின் விற்பனையும், நிகரலாபமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, மதிப்பிடப்பட்டுள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|