பதிவு செய்த நாள்
26 நவ2013
01:10
புதுடில்லி:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), 'டெபிட் கார்டு'மூலம் ஏ.டி.எம்.,ல் மட்டுமின்றி, பல்பொருள் அங்காடிகளிலும், பணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.பரிவர்த்தனை:முதன் முறையாக, பொதுத் துறை வங்கியொன்றின் வாடிக்கையாளர்களுக்கு, இத்தகைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், 'டெபிட் கார்டு' உள்ளோர், அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் ரொக்கமாக பெற முடியும்.இச்சேவைக்காக, வாடிக்கையாளரிடம், ஒரு பரிவர்த்தனைக்கு, 7.50 ரூபாய் வசூலிக்கப்படும். இதில், கடைக்காரருக்கு, 5 ரூபாய் கிடைக்கும்.வாடிக்கையாளர், ஏ.டி.எம்., இயந்திரத்தை தேடி அலைய வேண்டியதில்லை. அதே சமயம், கடைக்காரர்களுக்கு, இச்சேவை யால், கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், அவர், தன்னிடம் உள்ள அதிகப்படியான ரொக்கத்தை குறைத்து, சுலபமாக அத்தொகையை தமது வங்கி கணக்கில், சேர்த்துக் கொள்ளலாம்.எஸ்.பீ.ஐ., 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றுடன் கடன் அட்டை சார்ந்த பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகிறது. இது போன்று, ஒட்டு மொத்த வங்கித் துறைக்கு, நாடு முழுவதும், 10.5 லட்சம் வணிக மையங்கள் உள்ளன.
இருப்பு:வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான பணத்தை, 'டெபிட் கார்டு' மூலம், வணிக அங்காடிகளில் பெறுவது பரவலானால், வங்கிகள், ஏ.டி.எம்., இயந்திரங் களில், பணத்தை இருப்பு வைப்பது குறையும்.இது, ஏ.டி.எம்., மையங்களில் நடைபெறும் கொள்ளை, வெட்டுக்குத்து சம்பவங்களையும் குறைக்க உதவும் என, வங்கித் துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|