2,875 நிறுவனங்களின் நிகரலாபம் 27 சதவீதம் குறைந்துபோனது2,875 நிறுவனங்களின் நிகரலாபம் 27 சதவீதம் குறைந்துபோனது ... நாட்டின் காபி ஏற்றுமதி 51 லட்சம்மூட்டைகளாக குறைய வாய்ப்பு நாட்டின் காபி ஏற்றுமதி 51 லட்சம்மூட்டைகளாக குறைய வாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பீ.ஐ., ‘டெபிட் கார்டு’ மூலம் கடைகளில் பணம் பெற வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
01:10

புதுடில்லி:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), 'டெபிட் கார்டு'மூலம் ஏ.டி.எம்.,ல் மட்டுமின்றி, பல்பொருள் அங்காடிகளிலும், பணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.பரிவர்த்தனை:முதன் முறையாக, பொதுத் துறை வங்கியொன்றின் வாடிக்கையாளர்களுக்கு, இத்தகைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், 'டெபிட் கார்டு' உள்ளோர், அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் ரொக்கமாக பெற முடியும்.இச்சேவைக்காக, வாடிக்கையாளரிடம், ஒரு பரிவர்த்தனைக்கு, 7.50 ரூபாய் வசூலிக்கப்படும். இதில், கடைக்காரருக்கு, 5 ரூபாய் கிடைக்கும்.வாடிக்கையாளர், ஏ.டி.எம்., இயந்திரத்தை தேடி அலைய வேண்டியதில்லை. அதே சமயம், கடைக்காரர்களுக்கு, இச்சேவை யால், கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், அவர், தன்னிடம் உள்ள அதிகப்படியான ரொக்கத்தை குறைத்து, சுலபமாக அத்தொகையை தமது வங்கி கணக்கில், சேர்த்துக் கொள்ளலாம்.எஸ்.பீ.ஐ., 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றுடன் கடன் அட்டை சார்ந்த பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகிறது. இது போன்று, ஒட்டு மொத்த வங்கித் துறைக்கு, நாடு முழுவதும், 10.5 லட்சம் வணிக மையங்கள் உள்ளன.
இருப்பு:வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான பணத்தை, 'டெபிட் கார்டு' மூலம், வணிக அங்காடிகளில் பெறுவது பரவலானால், வங்கிகள், ஏ.டி.எம்., இயந்திரங் களில், பணத்தை இருப்பு வைப்பது குறையும்.இது, ஏ.டி.எம்., மையங்களில் நடைபெறும் கொள்ளை, வெட்டுக்குத்து சம்பவங்களையும் குறைக்க உதவும் என, வங்கித் துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)