பதிவு செய்த நாள்
26 நவ2013
01:11
புதுடில்லி:நடப்பு, 2013 – 14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்., – செப்.,) இந்தியா வின் காபி ஏற்றுமதி, 51 லட்சம் மூட்டை களாக (ஒரு மூட்டை 60 கிலோ) குறையும் என, அமெரிக்க வேளாண் துறை தெரிவித்து உள்ளது.நடப்பு பருவத்தில், இந்தியாவில் காபி உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டாலும், ஏற்றுமதி விலை குறைந்துள்ளதாலும், நாட்டின் காபி ஏற்றுமதி கடந்த பருவத்தை விட, 1.05 லட்சம் மூட்டைகள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2012 – 13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்தியாவின் காபி ஏற்றுமதி, சாதனை அளவாக, 52 லட்சம் மூட்டைகளாக இருந்தது.
நடப்பு பருவத்தில், சர்வதேச அளவில் காபி உற்பத்தியாகும் நாடுகளில், இதன் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் காபியின் விலை சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இந்தியாவில், நடப்பு பருவத்தில், காபி உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு உள்ளது.அதே சமயம், இந்திய காபி ஏற்றுமதியாளர்கள், நடப்பு பருவத்தில் நாட்டின் காபி ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என, தெரிவித்துள்ளனர்.சர்வதேச சந்தையில், இந்திய காபி கொட்டைக்கும், பதப்படுத்தப்பட்ட காபிக்கும் தேவை உள்ளது. இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதும், இந்திய காபி ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக உள்ளது என, அவர்கள் தெரிவித்து உள்ளனர்.நடப்பு, 2013 – 14ம் பருவத்தில், இந்தியா வின் காபி உற்பத்தி, 57 லட்சம் மூட்டை களாக இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.
இது, இந்திய காபி வாரியத்தின் மதிப்பீட்டை விட குறைவாகும்.இந்தியாவின் மொத்த காபி உற்பத்தியில், கர்நாடக மாநிலம், 70 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இம்மாநிலத்தில், காபி உற்பத்தியாகும் பல மாவட்டங்களில், அதிக அளவில் மழை பெய்ததால், காபி பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்தியாவின் காபி உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் காபியில், பெரும் பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|