பதிவு செய்த நாள்
26 நவ2013
01:15
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தின் முதல் நாளான, நேற்று, சிறப்பாக முன்னேற்றம் கண்டது.கடந்த வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 62.87ஆக இருந்தது. இந்த மதிப்பு, நேற்று, 37 காசுகள் அதிகரித்து, 62,50 ஆக உயர்ந்தது.இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள், இறக்குமதி நிறுவனங்கள் ஆகியவை, டாலர் வாங்குவதை குறைத்துக் கொண்டன.இதனால், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மதிப்பு உயர வழி வகுத்தது.
நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 62.67ஆக உயர்ந்து காணப்பட்டது. இது, ஒரு கட்டத்தில், 62.42 வரை அதிகரித்தது.எனினும், நடப்பாண்டு, ஜனவரி முதல் தற்போது வரை ரூபாய் மதிப்பு, 12 சதவீதம் குறைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளதில், இந்தோனேஷியாவின் ருப்யா, ஐப்பானின் யென் ஆகியவற்றை அடுத்து, இந்தியாவின் ரூபாய் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|