பதிவு செய்த நாள்
26 நவ2013
01:17
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், நடப்பு வாரத்தின் துவக்க நாளான நேற்று, நன்கு இருந்தது. அன்னிய முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனப் பங்குகளில் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தி்ல், வங்கி, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், மருந்து, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 387.69 புள்ளிகள் அதிகரித்து, 20,605.08 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,626.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,326.66 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா உள்ளிட்ட, 27 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாக்டர் ரெட்டிஸ் லேப், இன்போசிஸ், என்.டி.பி.சி., ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி'. 119.90 புள்ளிகள் உயர்ந்து, 6,115.35 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 6,212.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,110.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|