பதிவு செய்த நாள்
26 நவ2013
15:26
மதுரை: நீண்ட இழுபறிக்கு பின், தென்மாவட்ட காய்கறி உற்பத்தியை மையப்படுத்தி, மதுரை கொடிக்குளத்தில், "மெகா' காய்கறி வணிக வளாகம், விரைவில் அமைய உள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், 2010-11ன் கீழ், மாநில வேளாண் விற்பனை வாரியமும், மதுரை மாநகராட்சியும் இணைந்து, 85 கோடி ரூபாயில், மதுரையில், "மெகா' காய்கறி வணிக வளாகம் அமைக்க திட்டமிட்டன. மதுரை கொடிக்குளத்தில், இதற்காக, 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குனர் தவசுமுத்து கூறியதாவது: மதுரையில், "மெகா' காய்கறி வணிக வளாகம் அமைக்க, மத்திய அரசு சார்பில், 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அமைச்சகம் சார்பில், வணிக வளாகத்திற்கான இடம், இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இந்த, "மெகா' காய்கறி வணிக வளாகம், தென்மாவட்ட மக்களுக்கான, சில்லர மற்றும் மொத்த காய்கறி விற்பனை வணிக வளாகமாக செயல்படும். காய்கறிகளை சுத்தம் செய்தல், தரம்பிரித்தல், குளிர்பதன கிடங்கில் வைத்தல், நவீன எடை மேடை, தொழில்நுட்ப பயிற்சி, வாகன போக்குவரத்து என, அனைத்து வசதிகளும், வணிக வளாகத்தில் நிறைந்திருக்கும். இவ்வாறு, தவசுமுத்து கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|