பதிவு செய்த நாள்
27 நவ2013
00:11
நாமக்கல்,: ல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் கறிக்கோழி விலைக்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், சில பண்ணையாளர்கள் தனிக்குழுவாக செயல்பட்டு, தனியாக விலை நிர்ணயம் செய்து, கறிக்கோழியை சப்ளை செய்து வருகின்றனர்.ஆந்திராதிருப்பூர் மாவட்டம், பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) சார்பில், நிர்ணயிக்கப்படும் விலைக்கு, உயிர் கறிக்கோழியை, வியாபாரிகள், பண்ணைகளில் பெற்று, கேரளா, ஆந்திரா, தமிழக வட மாவட்டங்களுக்கு சப்ளை செய்கின்றனர்.
கேரள அரசு, ஒரு கிலோ உயிர் கோழியின் விலைக்கு, ‘பிளாட் ரேட்’ நிர்ணயம் செய்து, கூடுதல் வரி வசூலித்து வருகிறது. மேலும், அந்த மாநிலத்திற்கு வாரந்தோறும், தமிழகத்தில் இருந்து, 20 லட்சம் கிலோ கறிக்கோழி சப்ளை செய்த நிலையில், தற்போது, 10 லட்சமாக குறைக்கப்பட்டது.கேரள அரசின், ‘பிளாட் ரேட்’ முறை, அதிகளவு கறிக்கோழிகள் உற்பத்தி, சில்லரை வியாபாரிகள் ஆதிக்கம் ஆகியவற்றால், கறிக்கோழி விற்பனை கடுமையாக சரிந்து, தற்போது, கணிசமாக விலை உயர்ந்து வருகிறது.
கொள்முதல் விலை:மேலும், பல்லடத்தில் நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலையை விட, பண்ணைகளில் குறைந்த விலைக்கு கறிக்கோழி கிடைக்கிறது.இந்நிலையில், பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில், நிர்ணயிக்கப்படும் விலையும், வியாபாரிகள், பண்ணையில் இருந்து வாங்கிச் செல்லும் விலையும் முரண்பாடாக இருப்பதால், பி.சி.சி., - மற்றும் பண்ணையாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.அதனால், பி.சி.சி.,யில் இணைந்திருக்கும் சில பண்ணையாளர்கள், ஒரு வாரமாக, கறிக்கோழிக்கு, தனி விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்து வருகின்றனர். பண்ணை விலைக்கே, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு கறிக்கோழியை சப்ளை செய்யத் துவங்கி உள்ளனர்.கறிக்கோழியின் விலை, நவம்பர், 4ம் தேதி, கிலோ, 40 ரூபாயாக இருந்தது. இது, படிப்படியாக உயர்ந்து, நேற்றைய நிலவரப்படி, 59 ரூபாயாக அதிகரித்துள்ளது.பயன் இல்லைநாமக்கல் கறிக்கோழி பண்ணையாளர் சுப்ரமணியம் கூறியதாவது:பி.சி.சி., நிர்ணயிக்கும் கறிக்கோழி கொள்முதல் விலை மற்றும் நாமக்கல், ‘நிக்’ நிர்ணயிக்கும் முட்டை கொள்முதல் விலை ஆகியவை, பண்ணையாளருக்கு எவ்விதத்திலும் நேரடியாக பயன் தருவதில்லை.
வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர் நிர்ணயிக்கும் விலையே இறுதியானதாக உள்ளது.பெயருக்காக செயல்படும் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து, பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் சிலர் வெளியேறி, தனியாக கறிக்கோழிக்கு விலை நிர்ணயம் செய்து, பண்ணை விலைக்கே, கறிக்கோழியை விற்பனை செய்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
விலை நிர்ணயம்:பல்லடம் பி.சி.சி., செயலர் கண்ணன் கூறியதாவது:பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து, எந்த பண்ணையாளரும் வெளியேறவில்லை. சில பண்ணையாளர்கள் தனிக் குழுவாக செயல்பட்டு, பண்ணை விலைக்கே கறிக் கோழியை சப்ளை செய்கின்றனர்.சில கம்பெனி பிராய்லர் கோழிகள், 10 முதல், 12 ரூபாய் வரை, பண்ணை மற்றும் கொள்முதல் விலை வித்தியாசத்தில் விற்கப்படுகிறது. ஆனால், பி.சி.சி., நிர்ணயிக்கும் கொள்முதல் விலை, குறைந்தபட்சம், இரண்டு ரூபாய் அளவிற்கு வித்தியாசம் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|