பி.சி.சி., அமைப்புக்கு  எதி­ராக பல்­லடத்தில் புதிய கறிக்­கோழி பண்­ணை­யாளர் குழு உதயம்பி.சி.சி., அமைப்புக்கு எதி­ராக பல்­லடத்தில் புதிய கறிக்­கோழி பண்­ணை­யாளர் ... ... சர்க்­கரை ஆலை­க­ளுக்கு வட்டி இல்­லாமல் கடன் வழங்க திட்டம் சர்க்­கரை ஆலை­க­ளுக்கு வட்டி இல்­லாமல் கடன் வழங்க திட்டம் ...
‘எரி­வாயு விலை உயர்வை திரும்ப பெறும் திட்­ட­மில்லை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2013
00:12

மும்பை: "அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அம­லுக்கு வரும், இயற்கை எரி­வாயு விலை உயர்வை திரும்பப் பெறும் திட்­ட­மில்லை" என, பெட்­ரோ­லிய துறை அமைச்சர் வீரப்­ப­மொய்லி தெரி­வித்தார்.அவர், மும்­பையில், முத­லீட்­டா­ளர்கள், வங்­கி­யா­ளர்கள் கூட்­டத்தில் பங்­கேற்ற பின்னர், செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:பிர­த­மரின் பொரு­ளா­தார ஆலோ­சகர் சி.ரங்­க­ராஜன் தலை­மை­யி­லான குழு, ஒரு லட்சம் யூனிட் இயற்கை எரி­வாயு விலையை, 4.2 டாலரில் இருந்து, 8 டால­ராக உயர்த்த பரிந்­து­ரைத்­துள்­ளது. இதன் மூலம், மத்­திய அர­சுக்கு, ஆண்­டுக்கு கூடு­த­லாக, 50 கோடி டாலர் வருவாய் கிடைக்கும்.வரும், 2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விலை உயர்வு அம­லுக்கு வரும். இதற்­கான அர­சாணை விரைவில் வெளி­யி­டப்­படும்.
இத்­திட்­டத்தை திரும்ப பெறும் பேச்­சுக்கே இட­மில்லை. அனைத்து தொழில் நிறு­வ­னங்கள் மற்றும் வீட்டு பயன்­பாட்­டிற்­கான எரி­வா­யுவை வினி­யோ­கிக்கும் நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்­றுக்­கான எரி­வாயு விலை, ஒரே சீராக இருக்க வேண்டும் என்­பதில், மத்­திய அரசு உறு­தி­யாக உள்­ளது.பொதுத்­துறை, தனியார் துறை நிறு­வ­னங்­க­ளி­டையே பார­பட்­ச­மின்றி, அனைத்து வித­மான எரி­வா­யு­விற்கும் ஒரே சீரான விலை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது.ஆகவே, இதில், மானியம் வழங்­கு­வது குறித்து முடி­வெ­டுப்­பது, சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­கங்கள் மற்றும் தொழில்­து­றை­களை பொறுத்து உள்­ளது. இதில், எண்ணெய் அமைச்­ச­கத்தின் பங்கு எதுவும் இல்லை. இவ்­வாறு அமைச்சர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)