பதிவு செய்த நாள்
27 நவ2013
00:12
மும்பை: "அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும், இயற்கை எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறும் திட்டமில்லை" என, பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.அவர், மும்பையில், முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு, ஒரு லட்சம் யூனிட் இயற்கை எரிவாயு விலையை, 4.2 டாலரில் இருந்து, 8 டாலராக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு கூடுதலாக, 50 கோடி டாலர் வருவாய் கிடைக்கும்.வரும், 2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
இத்திட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயுவை வினியோகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான எரிவாயு விலை, ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களிடையே பாரபட்சமின்றி, அனைத்து விதமான எரிவாயுவிற்கும் ஒரே சீரான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆகவே, இதில், மானியம் வழங்குவது குறித்து முடிவெடுப்பது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறைகளை பொறுத்து உள்ளது. இதில், எண்ணெய் அமைச்சகத்தின் பங்கு எதுவும் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|